Thursday, January 05, 2017

நீலாம்பல் நெடுமலர்.11.


கல் விளக்கின் சுடர் நிலையாக நின்றிருக்கின்றது. பொன் கல்லால் செதுக்கி வைத்த ஒற்றை விரல் போல் குவிந்து கீழகன்று மேல் குறுகிக் கூர் நுனி கொண்டு வானோக்கி ஒரு சிகரம் போல். செழும் செவ்வண்ணம் அடிவானின் சிவப்பு போல் அடியில் தேங்கி குவிகின்றது. புதுக்காலை கீழ் ஆகாயம் போல் இளமஞ்சள் நிறம் பரவிய மேல் பகுதியைத் தாங்கி நிற்கும் சுடர் ஓர் அற்புதம்.

சுடரைத் தீண்டும் எண்ணம் கிளரச் செய்யும் இளமனதை. சுடர் எப்போதும் எரிந்து கொண்டிருப்பதில்லை. விளக்கின் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கையில் தூண்டும் எரி அகம் கிளறிப் புறம் ஏகப் பற்றி எரியும் செந்தீ. சிறியதாய்த் தெரியும் திரியை வெம்மை தின்று கொண்டிருக்கும்.

அணையாச் சுடர் ஆளும் புடவியை பலகோடி சிறு சுடர்கள் காக்கின்றன. அவ்வெம்மை தீராதிருக்கும் வரை ஜீவ செழுமை நிறைத்துக் கொண்டிருக்கும் இவ்வெளியை.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

OK... OK>>>

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் தனபாலன் சார்..