Tuesday, September 12, 2017

நீலாம்பல் நெடுமலர்.19.

னக்கென ஒரு மொழியை உருவாக்கி நன்கு பயின்றும் வைத்திருக்கிறாய்.

மெல்லச் சிரித்தல், புருவங்களை நெரித்தல், கண்களைச் சுருக்கி உதடுகளைக் குறுக்கி வைத்துக் கொள்ளல், காது மடலூரும் சிறு முடிக் கற்றையைச் சுருட்டிப் பின் தள்ளல், இருபுறமும் விழியுருட்டித் திசை காட்டல், ஏதறியேன் எனல் போல் தோள் குலுக்கல், எழுத்துக்கள்.

தேறல் கள் மாந்திய செங்கரும்பு போன்ற இதழ்களைச் சுளித்தல், கணு கழிந்த மூங்கில் தோள்களை முறுக்கி மிரட்டல், நிலம் துளைத்த நெடுநெல் நாற்று விரல்களால் காற்றில் இசையெழுப்பும் சமிக்ஞைகளை இயற்றல், முழுதாய்த் திரும்பிச் சென்றபின்னும் முகம் காட்டிப் பழிப்பூட்டல், சொற்கள்.

நீலிரவு நீண்டெழ நில்லா உரையாடலில் வான் விரி மீனளவு உணர்வு முகங்கள், செலுமுன் விரைந்து மீண்டு முழுதாயிடும் ஈர முத்தம், சிறு பரு ஒன்றெழக் காரணம் வினவ கதிர்மறை மலைமுகட்டுச் செம்மை அடை சிரம் கவிழ்தல், யாரோ எனக் கண்டு பின் யானே எனக் கண்டு நானே என அணைத்தென் முதுகில் உன் மாரெழ இறுக்கும் இறுக்கம், வாக்கியங்கள்.

No comments: