Friday, October 20, 2017

நீலாம்பல் நெடுமலர்.23.



சென்ற ஆண்டு முதல் கொஞ்ச கொஞ்சமாகக் கன்னட மொழியைக் கற்க முயன்று கொண்டிருக்கின்றேன். க்ளாஸிக் என்று அறியப்படும் காலத்தை வென்ற திரைப்பாடல்களைக் கேட்டுக் கேட்டுச் சில சொற்களை அறிந்து வைத்து, அவற்றைக் கொண்டு எழுதிய சில கவிதைகளை இங்கே இணைக்கிறேன்.

தமிழ் மொழிபெயர்ப்புகளும் கூடவே.


நின்ன சவி மாத்துகளு
ஒல்லே கவி மாத்துகளு
ஆ மாத்துகளு சங்கீதவாய்த்து
கேளிதே நனகே சந்தோஷவாய்த்து.

உன்னுடைய இனிய சொற்கள்
நல்ல கவிதைச் சொற்கள்
அந்தச் சொற்கள் சங்கீதம் போன்றன
கேட்கையில் எனக்கே மகிழ்ச்சி ஆகின்றது

நின்ன ஹெஸரு ஏனு ஹெண்ணே?
நன்ன ஹெஸரு நிமகே யாக்கே?
யாக்கேந்த்ரே நாளெ நின்னனு கரெதனு அந்தா
நீவு கரெதனே நன்னனு சந்தா அந்தா.

உன்னுடைய பெயர் என்ன பெண்ணே?
என்னுடைய பெயர் உங்களுக்கு எதற்கு?
ஏனென்றால் நாளை உன்னை கூப்பிடுவதற்கு என்பதற்காக.
நீங்கள் கூப்பிடுங்கள் என்னை அழகு என்று.

நின்ன முகவு பெலதிங்களு அந்தா
நின்ன மனவு சவிஜேனு அந்தா
நின்ன தேகவு கெம்பு பெங்கி அந்தா
நன்ன கனவு ஆ பெங்கினல்லி சேரலு அந்தா.

உன் முகம் ஒளிவிடும் நிலவு போன்றது
உன் மனம் இனிய தேன் போன்றது
உன் தேகம் சிவந்த நெருப்பு போன்றது
என் கனவு அந்த நெருப்பில் சேரவேண்டும் என்பது.

ஹஸிரில்லா பனவந்தா நானிருவனு
தங்காலி மலெயந்தா நீ பருவெனு
மனவு தனுவு தம்பதாய்த்து
நன்ன நெரலவு பிலி பன்னவாய்த்து

பச்சையில்லா வனம் போன்று நான் இருக்கிறேன்
குளிர்த்தென்றல் மழை போல நீ வருகின்றாய்
மனதும் உடலும் குளிர்வாயிற்று
என் நிழலும் வெண்மையான நிறமாயிற்று

மோடகளிந்தா மலெ பந்தனு
கண்ணுகளிந்தா ப்ரீத்தி பந்தனு
மலெபில்லுனல்லி ஏலு பன்னா இருத்ததே
மனகுஹயுனல்லி ஏலு ஸாவிர பன்னா இருத்ததே

மேகங்களிலிருந்து மழை வந்தது
கண்களிலிருந்து காதல் வந்தது
மழைவில்லில் ஏழு வர்ணங்கள் இருக்கின்றன
மனக்குகையில் ஏழாயிரம் வர்ணங்கள் இருக்கின்றன

நினகாகி நன் ஜீவனா
யாக்கே ஈ கோப பாவனா
கோபதல்லி ஹூவந்தா நின் மொகவு
சந்தோஷதல்லி சந்த்ரனந்தா பால செலவு

உனக்காக என் வாழ்வு
ஏன் இந்தக் கோப பாவனை
கோபத்தில் பூப்போல உன் முகம்
மகிழ்ச்சியில் நிலவைப் போல பேரழகு

No comments: