Saturday, August 04, 2007

இருந்திருக்கலாம்.


தழ்கள் ஈரத்தோடு மினுமினுக்க, மென் சூட்டில் அலைகின்ற மூச்சு மெல்ல உரசிக் கொண்டிருக்க, நெருங்கி வந்து நீ கொடுத்தாய் ஒரு முத்தம். அவனுக்கு ! என் ஜீவனெல்லாம் உறைந்து போனது.

முகத்தை இழுத்துப் பிடித்து, கண்களைத் தடவுகிறாய். நாசியைப் பிடித்து இழுக்கிறாய். பவள வாயின் உதடுகளை ரசிக்கிறாய்.

கன்னங்களை நிரப்புகிறாய், உன் முடியாத முத்தங்களால்.

சிணுங்கி நகரும் அவனை இழுத்து, உன்னோடு அணைத்துக் கொள்கிறாய்.

கண்டபின் தோன்றுகிறது, உன் கணவனாய் இருப்பதை விட, மகனாய் இருந்திருக்கலாம் என்று...!

No comments: