Tuesday, August 21, 2007

ஆண்டொன்று போனால்...!

ரு வருடம் ஆகி விட்டது.

இதே நாள், ஒரு நல்ல நேரத்தில், ஒரு சிறகு பறக்கத் தொடங்கியது. காற்றின் போக்கில் அலையலையாய் ஆடி, மெதுவாக நகர்ந்தது.

தொடங்கியது இணையத்தில் ஒரு பயணம்...!

ஆச்சரியங்கள், அதிர்ச்சிகள், ஆனந்தங்கள், வருத்தங்கள்... வாழ்வின் சின்னச் சின்னக் கூறுகளைக் கொண்டு நகர்ந்து சென்றது ஒரு வருடம்..!

பின்னூட்டங்களால் ஊட்டம் கொடுத்து, முன்னோக்கி நகர்ந்து செல்ல அன்பைப் பொழிந்த அன்பர்கள், நண்பர்கள், தோழிகள், பெரியவர்கள் அனைவரது கையையும் பிடித்து இன்னும் நகர்கிறது அச்சிறகு...!

இன்னும் பிம்பங்களைப் பதித்துச் செல்ல, இருக்கிறது நெடும்பயணம்...!

4 comments:

PPattian said...

வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்.

இரா. வசந்த குமார். said...

ppattian ஸார்... தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்...

Anonymous said...

ஒரு வருடம் முடிந்து இரண்டாவது வருட துவக்கமா??..வாழ்த்துக்கள் வசந்த், இன்னும் நிறைய எழுதுங்க.

எங்களுக்கு ட்ரீட் எல்லாம் இல்லையா?? :)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... மிக்க நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு...

/*எங்களுக்கு ட்ரீட் எல்லாம் இல்லையா?? :)
*/

இன்னும் சிறப்பாக, வெவ்வேறு தளங்களில், பயனுறும் வகையில் எழுதுவதையே, சமூகத்திற்கு அளிக்கின்ற ட்ரீட்டாக நினைக்கின்றேன்...

(ஹப்பா... எஸ்கேப்..)