Monday, January 21, 2008

1999 - அரையிறுதி.

வ்வொரு வயதினர்க்கும் அவர்கள் பார்த்த கிரிக்கெட் மேட்ச்களில் ஏதாவதொரு மேட்ச் கண்களிலேயே தங்கியிருக்கும். எப்போது நினைத்துப் பார்த்தாலும், அதே பரவச உணர்வு.!

நான் பார்ப்பதே மிகச் சொற்ப மேட்சுகள். அதிலும் மறக்க முடியாத மேட்ச், 1999 ஆஸி - தென் ஆப் இடையே நடந்த அரையிறுதி.

என்ன மேட்சுங்க அது..! அதுவும் அந்தக் கடைசி ஓவர். மறக்கவே முடியாது.

க்ளூஸ்னர் இரண்டு பவுண்டரிகள் அடித்ததும், எழுந்து கத்தி விட்டேன். மணி இரவு 2 மணி. என்ன பரபரப்பு..! 4 பந்துகளில் 1 ரன்.

பிறகு தடாலடியாக ஆட்ட வியூகமே மற்றப்பட்டது. ஒரு ரன் தானே என்ற அலட்சியம் இல்லாத தென் ஆப் அணி, அந்த ஒரு ரன்னையும் எடுக்க முடியாதபடிக்கு ஆஸியின் க்ளோஸ் ஃபீல்டிங்.... அட்டகாசம்.!

மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆன ஜோடியின் கைகளில் அணியின் 20 ஆண்டு கால கனவு..! அத்தனையும் அடுத்த பந்தில் மாறிப் போனது.



மிகவும் வருத்தமாகி விட்டது.

ஆனால், பாக்.-ஐ ஆஸி சுருட்டி வீசியதில் இருந்த வருத்தம் இறுதிப் போட்டியில் மறைந்தது.

No comments: