Tuesday, August 12, 2008

ஈரோடு நூல் அழகம்.

சேதன் பகத்தின் 5PS படித்து அசந்து, One night @ the call centre மற்றும் The 3 mistakes of my life வாங்கினேன். One Night... ஓரிரவில் கொஞ்சம் தான் படித்தேன். அதற்கு மேல் படிக்கவில்லை. ஆனால் 3 Mistakes ஒரே சிட்டிங்கில் படிக்கவில்லை என்றாலும், இரண்டு சிட்டிங்கில் முடித்தேன். அருமையாக இருந்தது. கதையோட்டம் தெளிவாக ஓடிக் கொண்டே இருந்தது. க்ளைமாக்ஸ் அபாரம். கொஞ்சம் Controversial இஷ்யூவாக எடுத்து பக்காவாக பேக் செய்து கொடுத்துள்ளார். அடுத்த நாவலை ஆர்வமாக எதிர்பார்க்கிறேன். அதற்கு முன் முதல் இரு நாவல்களையும் இந்தி படமாக எடுக்கிறார்களாம். முறையே அமீர், சல்மான் என்ற கான்களை வைத்து..! பயமாய் இருக்கிறது.

சென்ற வெள்ளி சென்னை எக்ஸ்ப்ரஸில் ஊருக்குச் சென்றேன். செல்லும் வழியெங்கும் வித,விதமாக படுத்து புரண்டு 3 Mistakes படித்து முடித்தேன். அவ்வப்போது எலி கம்பார்ட்மெண்டுகளுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்தது அவ்வப்போது டிஸ்டர்ப் செய்த்தது. அது ஒரே எலி தானா? வெவ்வேறு எலிகளா? அவை என்ன நினைத்துக் கொண்டிருக்கும்? அவை பயணம் செய்யும் ரயில் ஓடிக் கொண்டிருப்பதை அறியுமா? ஜன்னல் வழி பார்த்து மரங்கள், எலெக்ட்ரிக் போஸ்டுகள், நதிப்பலங்கள் பின்புறமாக 80 கி.மீ. வேகத்தில் பின்புறமாய் நழுவுவதை பார்த்து என்ன எண்ணும்? இச்சூழலில் இரண்டு எலிகள் என்ன பேசிக் கொள்ளும்?

ஒரு
கற்பனை
.அது கடைசியில்.

னிக்கிழமை மாலை முழுதும் ஈரோடு நூல் அழகத்தில் கழிந்தது. வழக்கம் போல் 3Kக்கு பக்கத்தில் (உஷ்... எங்க அம்மாகிட்ட சொல்லிடாதீங்க..!) புத்தகங்கள் வாங்கினேன். என்ன என்ன வாங்கினேன் என்று லிஸ்ட் போடலாம். ஆனால் எதற்கு ஒரே பதிவிலேயே அவ்வளவு பந்தா பண்ணிக் கொள்ள வேண்டும்? ஒவ்வொன்றாக படித்துப் படித்து ஒவ்வொரு போஸ்டிலும் சொல்லுகிறேனே!

டீயை சிப், சிப்பாக அருந்து என்கிறது ஜென் ப்ரின்ஸிபிள்!

புத்தகங்களை எக்கச்சக்கமான பாலிதீன் கவர்களில் திணித்து, கை விரல்களில் சிக்கிக் கொண்டு, களைத்து வெளியே போவதற்கு முன், சென்டர் ஸ்டேஜைப் பார்த்தால் அவ்வளவு கூட்டம். சிவகுமார் அன்று பேசுகிறார். தூரத்தில் கொஞ்சம் பெரிய புள்ளிகளாகத் தெரிந்தனர், ஸ்டேஜ் மக்கள்.

பள்ளி மாணவர்கள், மாணவியர் கூட்டம் சென்னையை விட நிறைய! கொஞ்சம் பெருமிதத்தால் நெஞ்சம் விம்மியது என்று சொன்னால் க்ளிஷே என்பீர்கள்.

வழமை போல் சமையல் மற்றும் சாமி புத்தகங்கள் அமோக விற்பனை என்று பட்டது. இப்போது கொஞ்சம் நானும் எலக்கியவாதி என்ற நினைப்பில் உயிர்மை, காலச்சுவடு போன்ற கூட்டம் மீக்குறை அவ்வளவாக கூட இல்லாத ஸ்டால்களுக்கு சென்று சில புத்தகங்களை எடுத்து, கிடைக்கவே கிடைக்காத தி.ஜா.வின் மோகமுள் கிடைக்குமா, நீ.ப.வின் பள்ளி கொண்டபுரம்..? என்று கேட்டேன். ஒரு மாதிரி பார்த்தார்கள்.

'சார்...(தம்பி போயிடுச்சு. இப்பெல்லாம் சார் தான்.. ;-( )நீங்க எந்த ஊரு?',

'ஏன்.. ஈரோட்டுக்காரன்னா இந்த புக்கெல்லாம் வாங்க மாட்டானா..?'

'அதுக்கில்ல.. நீங்க மீனாட்சில ட்ரை பண்ணிப் பாருங்க..'

உயிர்மையில் கேட்டால் 'காலச்சுவடுல பாருங்களேன்...'

அங்கே கேட்டால், 'உயிர்மையில கேட்டீங்களா..?'

விகடன் ஸ்டாலில் ஒரு குட்டிப் பையன் (6 வயது?) 'சிவாஜிராவ் முதல் சிவாஜி வரை'யை கவர் பிரித்து அப்பாவை நோக்கிச் சென்றான். ப்ராடிகியிலும் குழந்தைகள் கூட்டம் அப்பியது. மற்ற ஸ்டால்களிலும் நிறைய மக்கள். சென்னை மாடலில் தான் இருந்தது. எனக்கே ஆச்சரியம். இம்முறை விகடன், குமுதம் ஸ்டால்களில் நான் எதுவும் வாங்கவில்லை. கொஞ்சம் அடுத்த ஸ்டெப்புக்கு போய் இருக்கிறோமோ என்று அகங்காரம் வந்திருக்கிறது.

கிழக்கு வருவதற்குள் சளைத்து, பர்ஸ் இளைத்து விட்டதால் போய் பார்க்கவில்லை. உண்மையை சொன்னால் கிழக்கு என் கண்ணிற்கே தெரியவில்லை. நலம், ப்ராடிகி தெரிந்தது. சரி.. சென்னையில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டேன்.

அம்மாவையும் அடுத்த வீட்டு காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் பெண்ணையும் கூட்டி வந்ததில் அவர்கள் கையிலும் கொஞ்சம் மூட்டையை கொடுத்ததில் மிகவும் டய்ர்டாகி போனார்கள். சிவகுமார் அவர்களின் பேச்சைக் கூட கேட்காமல் வெளியேறினோம்.

உளுந்தங்கஞ்சி குடிக்கலாம் என்று தள்ளுவண்டிகளில் ஒன்றுக்கு போனால், அங்கே கறுப்பு தேநீர் சட்டையில் ஒரு சிறு கூட்டம். பார்த்தால் பத்ரி அண்ட் கோ. கொஞ்சம் அவருடன் பேசினேன். மற்றவர்களை அறிமுகமித்தார். மருதன், கண்ணன் பேர் மட்டும் ஞாபகம் இருக்கின்றது. மற்றவர்கள்

ஸாரி.



வெல்லம் போட்ட உளுந்தங்கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டே இருந்தார் பத்ரி. பா.ரா.வும் வந்திருக்கிறார். அழகம் உள்ளே சென்றிருக்கிறார் என்றார். எனக்கு மீ களைப்பாக இருந்ததால், இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களிடம் விடை பெற்று, வேறொரு த.வண்டியில் கம்பங்கூழ் ஒரு சொம்பு, மோர் ஒரு சொம்பு (ஒன்ஸ் மோர் ப்ளீஸ்!) குடித்து விட்டு வ.உ.சி. பூங்காவில் அமர்ந்தோம்.

வாங்கி வந்த புத்தகங்களை எல்லாம் அம்மா பார்த்து விட்டு, 'இந்த புக்கெல்லாம் உனக்கு எப்படிடா தெரியும்?' என்று கேட்டார்கள். உதா: ஆ.மாதவன் அவர்களின் கிருஷ்ணப் பருந்து. 'பலமுக மன்னன் ஜோ படித்த சிறுவன் நீ!' என்று பார்த்தார்கள்.

வீட்டிற்கு வந்து எல்லா நூல்களிலும் பெயர், தேதி, வாங்கிய இடம் எழுதும் போது, இன்றைய பர்ச்சேஸ் வாத்தியாருக்காக என்று தெரிந்தது.

வாத்தியாரின் என்னென்ன புக்ஸ்? ::

கணையாழி கடைசிப் பக்கங்கள்.

நானோ டெக்னாலஜி.

பதவிக்காக.

நிலா நிழல்.

பேசும் பொம்மைகள்.

ரத்தம் ஒரே நிறம்.

வண்ணத்துப்பூச்சி வேட்டை.

60 அமெரிக்க நாட்கள்.

ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்.

விஞ்ஞான சிறுகதைகள் தொகுப்பு.

ன்பான பெரியோர்களே... பாசமான தாய்மார்களே... கண்ணுங்களே.. தமிழ் வாழ்க... கலை வாழ்க, வந்தாரை வாழ வைக்கின்ற பவானி நகரில் சொக்காரம்மன் நகர், செங்காட்டில் இருக்கின்ற ஜனங்களே... வார்டு மெம்ப திரு... இடம் கொடுத்து உதவிய திருமதி.... எல்லார்ர்க்கும் வணக்கம். தொடர்ச்சியாக சைக்கிள் ஓட்டும் அண்ணன் ... அவர்களின் கடும் உழைப்பையும், கஷ்டப்படற வயிற்றையும் பார்த்து இரக்கப்பட்டு காசு குடுங்கம்மா...

கண்ணுங்களா...

வரும் போது சும்மா வராதீங்க. அம்மாகிட்ட ஆயிரம், ரெண்டாயிரம் வாங்கிட்டு வாங்க. உங்களுக்கு புடிச்ச பாட்டு போடறேன். டான்ஸ் ஆடறேன். சுப்ரமணி பாட்டை போடுரா...

'அப்படி போடு.. போடு.. அழுத்திப் போடு கையால....'

ஜன்னல் வழியாக கசிந்து வருகின்ற பாட்டும், விசில் சத்தங்களும், கை தட்டல் ஓசைகளும் என்னை சூழ்ந்து செவி வழி இறங்குகையில், கண்கள் வழி ஜெயமோகனின் 'நவீன தமிழிலக்கிய அறிமுகம்' படித்தேன்.

சென்னைக்கு போய் எந்த நதி என்றே தெரியாமல், மெட்ரோ வாட்டரும், மினரல் பாக்கெட் வாட்டரும் குடித்திருக்கிறேன். பெங்களூரில் சுத்த ரேஷியோ கொஞ்சம் கூடுதலான காவிரி நீர் குடித்திருக்கிறேன். இப்போது மலை நாட்டில் கொஞ்சம் மணக்கின்ற நீர்! ஆனால் பவானிக்கு வந்து அது காவிரியோ, பவானியோ குடித்து போனால் தான் சுளுவாக எளிதாக போகிறது. என்ன காரணம்? சொந்த ஊரின் சூழ்நிலையா?

ரண்டு நாட்களாக பூச்சி காட்டிக் கொண்டிருந்த கருமேகங்களும், லேசாக வலுத்த காற்றும் ஞாயிறு இரவு புது பஸ் ஸ்டேண்டில் கிளம்பும் போது பெய்யத் தொடங்கி, ஈரோடு ஸ்டேஷனை அடைந்து பஸ்ஸில் இருந்து இறங்கும் வரை கொட்டித் தள்ளியது. காற்றில் சிலுசிலு...!

கவர்ன்மெண்ட் பஸ் அல்லவா.. ஓரங்களில் பட்டு ஜரிகை போல் மழை பெய்ய, இருவருக்குள்

'யோவ்! ஏன்யா ஓரமா தள்ற..? மழ வருது தெரியுதில்ல?'

'அதுக்காக இவ்வளவு நெருக்கமா ஒக்காந்தா நான் எப்படி வர்றது?'

'அப்ப எந்திரிச்சு போய்யா..?'

'நான் எதுக்கு போகணும். டிக்கெட் எடுத்திருக்கேன்.'

சேலம் பை பாஸில் ஆரம்பித்து, கிட்டத்தட்ட ஈரோடு பஸ் ஸ்டேண்ட் வரும் வரை இவர்களின் வாய்ச்சண்டை இருந்ததே... அருமையாக பொழுது போனது.

நமக்கு சும்மாவே இருக்க முடியாதே..! ஏதாவது ப்ரச்னையை கிளப்பி விட்டு பேசிக் கொண்டே வர வேண்டியது. ஆக்ஷன் எடுப்பதே கிடையாது. இந்த பழக்கம் தான் எந்த பிரச்னைக்கும் தொடர் பேச்சு வார்த்தையில் இறங்கி, ஜவ்வாக்குகிறோம்.

நூல் அழகத்தின் கடைசி நாளில் மழை பெய்ததை எப்படி சமாளித்திருப்பார்கள் என்று தோன்றியது.

21:45க்கு வர வேண்டிய ட்ரிவேண்ட்ரம் எக்ஸ்ப்ரஸ் ரொம்ப லேட்டாகி,

யாத்ரியோன் க்ருபா ஜான்ந்தீஜியே, காடி நம்பர் 2695 சென்னை சென்ட்ரல் ஷே பாலக்காட், எர்ணாகுளம், கோட்டயம் மார்க் ஸே ட்ரீவேண்ட்ரம் தக் ஜானேவாலி சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் தோடி ஸி தேர் மே(ன்) ப்ளாட்ஃபார்ம் நம்பர் தோ பர் ஆயகி..!

என்று சொல்லும் போது மணி பத்தை நெருங்கி விட்டிருந்தது. அதற்குள்,

நனைந்த ஸ்டேஷன் சீட்டில்
அமர்ந்திருக்கும்
மழையும் குளிரும்!

என்ற ஹைக்கூ(?) தோன்ற குறித்துக் கொண்டேன்.

மிடில் பர்த்தில் படுத்துக் கொள்ளும் போது எதிர் வரிசையில்,

இளம் பையன்

மத்யமர்

பாட்டி

என்று இருந்தார்கள். இந்த இளன் எப்படிப்பட்ட கால மாற்றத்தில் இந்த மத்யமர் ஆவான் என்று எண்ணிப் பார்க்கும் போது, இருவருக்கும் இடையில் ஆறு வித்தியாசங்களுக்கும் மேல் கண்டு கொள்ள முடிந்தது.

பாட்டிக்கு பதில் ஒரு பாட்டர் இருந்தால் தலைமுறை இடைவெளி ஒரு பர்த்(Birth..?) தான் என்று கவிதை சொல்லி இருக்கலாம். அந்த பாட்டிக்கு வாய்த்த பாட்டர் எனது வரிசையில் லோயர் பர்த்தில் இருந்தார்.

***

எலி உரையாடல்.

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்.. கீச்... கீச்...கீச்.. கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: கீச்.. கீச்... கீச்...கீச்...

எலி 2: கீச்... கீச்...

எலி 1: அக்காங்பா.. நீ சொன்னது சர்தாம்பா. நம்மலயே வாச் பண்ணிகினு வந்தான்.

எலி 2: இப்ப தூங்கிட்டானா?

எலி 1: தூங்கிட்டான் போல கீது. அதான் நான் நம்ம பாஷயில பேசரன்.

எலி 2: ச்ச..! இவனுங்களோட ஒரே பேஜாரா போச்சு! அவன் இட்டந்த பையில எதுனா துங்கறதுக்கு இருக்க பாக்கணும் வா. முறுக்கு, சிப்ஸு, இப்டி எதுனா!

எலி 1: ஜல்தியா வா! டி.டி.ஆர் வந்துட்டான்னா பய முய்ச்சிக்குவான்..! அப்பால நம்ம பாடு கஷ்டமாப் பூடும்.

2 comments:

வேளராசி said...

இரண்டு வீடியோ படங்களும் அற்புதம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி...

வீடியோக்களின் உரிமையாளர்களுக்கு தங்கள் வாழ்த்துக்கள் சென்று சேர்வதாக....!