Monday, December 07, 2009

மொக்ஸ் - 17.Feb.1999 (?)

போன வாரம் வீடு மாற்றினோம் அல்லவா..? அதில் கிட்டத்தட்ட எடைக்குப் போய்விட்ட மூட்டைக்குள் இருந்து ஒரு நோட்டைக் கைப்பற்றினேன். சொல்லப் போனால் மீட்டேன் எனலாம். அந்த நோட்டிற்கு வயது இப்போது பத்து.

கொஞ்சம் மஞ்சள் பூசிக் கொண்டிருந்த அதன் தாள்களைப் புரட்டும் போது, அப்போதைய துளி நான் தெரிகின்றேன்; என் ஆர்வங்கள் தெரிகின்றன.

முதல் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டு வருகிறேன்.

ஆவர்த்தனப் பண்புகள் என்று சில வேதியியல் குறிப்புகள். பின் சடாரென டாபிக் மாறி, வெக்டர் அல்ஜீப்ராவின் சில ஃபார்முலாக்கள். பிறகு வரிசையாக ட்ரிக்ணோமெட்ரிக் சம்ன்பாடுகள். சில பக்கங்களில் எரிபொருள் இல்லாமல் காற்றின் வீசு விசையாலேயே வண்டி ஓடச் செய்யும் மெக்கானிக் இன்னொவேட்டிவ் மெதடின் பென்சில் டயாக்ராம். எப்படி அவ்வாறு சிந்தித்தேன் என்று இன்று புரியவில்லை. I born intelligent; education ruined me. :)

பரீட்சை சமயங்களுக்கான சில டைம் டேபிள்கள். திடீரென ஒரு C நிரல். அதில் ஒரு வாக்கியத்தில் எத்தனை vowels, எத்தனை consonants என்று அறிவதற்கான எளிய முறை. ஒரு பக்கம் முழுக்க ஸ்ரீ ராமஜெயம். அவ்வளவு தான். முன் அட்டையிலிருந்து படித்துக் கொண்டே போனால் முடிந்து விடுகின்றது.

இப்போது நோட்டின் பின் அட்டையிலிருந்து தலைகீழாகப் படித்துக் கொண்டே வந்தால், முதலில் நீர்த்த கரைசல்கள் என்று துவங்கும் ஒரு வேதி வாக்கியம். தொடர்ந்து முழுதும் எனது புதுமையான 'சமன்பாடு உருவாக்கங்கள்'. இயற்பியல், கணிதம் என்று வேறு வேறு துறைகளில் சில முயற்சிகள்.

இன்பினிட்டி மேல் அத்தனை பிரியம் இருந்திருக்கின்றது. 0 மற்றும் இன்பினிட்டிகளை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்திருக்கிறேன். 0/0 = 1, 0*இன்பினிட்டி = 0 அல்லது +- 1, sin(0/0), மதிப்பு கண்டுபிடித்தல், 0-இன்பினிட்டி = இன்பினிட்டி என்ற கணிதக் கிறுக்குகளுக்கு இடையே அவ்வப்போது, pkw = pka+pkb+2log(alpha) என்ற வேதிச் சமன்பாடு எழுதி, பின்னாடியே m/myu = 0.7362* 10 to the power of -50 - (1) மற்றும் lemda*m = 2.2086*10 to the power of -42 -(2) 'எனவே, பொருள் அல்லது ஒளிமூலத்தின் நிறையை அழ்திகரித்தால், அது வெளியிடும் ஒளியின், 1) அலைநீளம் குறையும், 2)அதிர்வெண் அதிகரிக்கும்' என்ற ஓர் இயற்பியல் முடிவு எழுதியிருக்க, இறுதியாக 1=2 என்ற விசித்திர முடிவு வேதியியல் சமன்பாட்டில் முயல்கையில் எட்டிப் பார்க்கின்றது.

சில பக்கங்களில் மதன் கார்ட்டூன்களைப் பிரதியெடுக்க முயன்றிருக்கிறேன். ஒரு ஆங்கிலக் கவிதை கண்ணில் படுகின்றது.

Only You..!

Now what I say to you!
Your eyes when touch my heart!
Now what I do to you!
Except, share my world with you!

You are not in here, but
My thoughts all in your near!
The time makes me to leave you,
When we see, say you!

I search you in the garden
In the sky, In the tars, In the rain..!
You're not in these things,
They lost their wings..!

When you search in the air, you hear
My long live sad in my tears!
When we meet in any time!
There is no words to talk with us.!

In many distance to the moon
The distance comes to our home!
How many distance with us,
My love will haven by you!

When my legs go to the heaven,
My thoughts want to touch you!
When the fire burns in my body,
The eyes want to see you, only you..!

-r.vasantha kumar.
17/02/99: 10:15

யாருக்காக இப்படி உருகி உருகி எழுதியிருக்கிறேன் என்றே தெரியவில்லை. ஒரு உயிர்க் கசியும் காதலுக்கு அதைக் கொள்ள ஒரு பெண் கூட தேவையில்லை என்பதே புரிகின்றது.

ஆங்கிலப் பிரயோகம் 99லிருந்து இந்தப் பத்து வருடங்களுக்குள் ஓர் இஞ்ச் கூட முன்னேறவேயில்லை என்பதைத் தான் முந்தின சிறுகதையும், இந்த கவிதையும் சொல்லி விடுகின்றன.

"வாழ்வோ தாழ்வோ நிரந்தரம் இல்லை. இது பயணம். போகிற வழியில் ஒரு பூ கிடைக்கும். ஒரு முள் குத்தும். ஒரு கல் தடுக்கும். ஒரு நிழல் ஆசுவாசப்படுத்தும். வெயில் கொளுத்தும். சந்தோஷமா மழை கொட்டும். பசிக்கு ஒரு கனி கிடைக்கலாம். கொண்டாடவோ, திண்டாடவோ எதுவும் இல்லை.

இது பயணம்...!"

-டி.என். சேஷகோபாலன்
(04.01.98 - ஆனந்த விகடன் - 133)

பக்கங்களுக்கிடையில் கிடைத்த எழுதி வைத்த பத்தி, இந்த நோட்டெங்கும் விரவியிருக்கும் அப்பாவின் வாசத்தை நினைவுபடுத்துகின்றது. இதற்காகத் தான் இந்தப் பத்தியை அப்போது எழுதி வைத்தேனோ, என்னவோ..!!!

3 comments:

thamizhparavai said...

இன்ஃபினிட்டியை நினைச்சாலே தலை சுத்துது...

ILA (a) இளா said...

உங்க அப்பாவின் பதிவும், ஊரும்தாங்க உங்கப் பதிவ தொடர்ந்து படிக்க தூண்டுச்சு

Chan said...

Arumayana pathivu, yenakkum oru pazaya natkalin vaasam varugirathu :) Ungal appavin ninaivugal yendrendrum ungal nenjil irukkatum...