Saturday, March 11, 2017

தேவி நின் புகழ்

தேவி

செஞ்சுடரோ செம்மலரோ செவ்விதழோ செய்தவம்
பஞ்சிணையோ பால்கலமோ பற்றெரியோ உய்நலம்
வஞ்சினமோ வாய்நலமோ வன்வழியோ பெய்புலம்
அஞ்சுவனை ஆதரிக்கும் தாள்.

கோடானு கோடிகோள் ஓயா வெளியிடை
ஓடாநின்ற ஒற்றைப் புவிதனில் - பாடாத
பாடுபடும் பிள்ளையைப் பாராட்டத் தாலாட்டப்
பீடுடன் தோன்றியதுன் தாள்.

நெய்யகல் பூமுகம் பொய்யகல் தீநிறம்
கையகல் பொன்னொளி மையகல் கூர்விழி
தையலுக்குத் தேந்தனம் வையலுக்குத் தீங்குரல்
மையலுக்கு நீர்மணம், நீ.

அனல்பூ முகமே தணல்தேன் விழியே
புனலாழ் மனமே புதுஆ - மணற்றுளி
முத்தே மரகதச் சொத்தே மதுரசப்
பித்தாக்கும் பின்னும் நடை.

No comments: