Tuesday, March 07, 2017

நன் இனிப் பால்.

குனிந்த முகத்தின் கனிந்த இதழைத்
துணிந்து மலர்த்திப் புரள்.

கனியே உனையே இனியே நினையேன்,
தனியே படுப்பின் துயர்.

உம்மைக் கருதினேன் வெம்மை பெருகினேன்.
நம்மை எரிப்பது தீ.

விரல்தொடு வில்லாய் விழிதொடு விண்நீர்க்
குரலெடு, குன்றுது நாள்.

தளிரிலை அங்கே கனியிணை இங்கே
களித்திடு என்றது யார்?

குவிமலை மையம் குவிந்தது எண்ணம்
கவிழ்ந்தது வாயென்ற நா.

No comments: