"கண்ணா..! நீ வாழப் போறது 80 வருஷம்னு வெச்சுக்கோ. மொத்தம் எவ்ளோ நாள்? 29220 நாள் தான் வருது. அதுலே நீ ஆக்டிவ்வா இருக்கிறது 65 வருஷம்னு வெச்சுக்கோ. எவ்ளோ வருது? 23741 நாள். அதுல ஆல்ரெடி 26 வருஷம் ஓடிப் போயிடுச்சு...! மிச்சம் எவ்ளோ இருக்கு பாரு? 65 - 26 = 39. 14244 நாள் தான். வெறும் பதினாலாயிரம் நாள் தான்.
அதுக்குள்ள எதுக்கு பிரச்னைகள், சண்டைகள், சோகங்கள், எல்லாம் எதுக்கு..? அதனால
Cooooooooool..."
Friday, February 15, 2008
Thursday, February 14, 2008
என்ன காரணம்
இரண்டு நாட்களுக்கு முன் கைக் கடிகாரம் தொலைந்து போனது. ஒன்றும் கவலை தோன்றவேயில்லை. 'சரி, கிடைத்தால் கிடைக்கட்டும். போனால் போகட்டும். யாரிடமும் சொல்லக் கூடாது. பார்ப்போம். கிடைக்குமா, இல்லையா என்று' என்று முடிவெடுத்து, எப்போதும் போல் Cool-ஆக இருந்தேன்.
இன்று கிடைத்து விட்டது. ஒன்றும் சந்தோஷம் தோன்றவில்லை. அப்படியா, கிடைத்து விட்டதா, நன்று என்று கட்டிக் கொண்டேன்.
கொஞ்ச நாட்களாகப் படுத்தி எடுத்த ஒரு Bug, திடீரென ஒரு வெள்ளிக் கிழமை இரவு சரியாகி விட்டது என்று தொலைபேசியில் வந்தது. சந்தோஷமே தோன்றவில்லை. 'அப்படியா' என்று சொல்லி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டேன்.
என்ன காரணம்?
மனம் பக்குவமடைந்து கொண்டிருக்கிறதா? இல்லை யோகா, தியானம் சென்று செய்வதால் ஏதாவது விளைவா?
கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது...!
இன்று கிடைத்து விட்டது. ஒன்றும் சந்தோஷம் தோன்றவில்லை. அப்படியா, கிடைத்து விட்டதா, நன்று என்று கட்டிக் கொண்டேன்.
கொஞ்ச நாட்களாகப் படுத்தி எடுத்த ஒரு Bug, திடீரென ஒரு வெள்ளிக் கிழமை இரவு சரியாகி விட்டது என்று தொலைபேசியில் வந்தது. சந்தோஷமே தோன்றவில்லை. 'அப்படியா' என்று சொல்லி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விட்டேன்.
என்ன காரணம்?
மனம் பக்குவமடைந்து கொண்டிருக்கிறதா? இல்லை யோகா, தியானம் சென்று செய்வதால் ஏதாவது விளைவா?
கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது...!
Wednesday, February 13, 2008
யாரடி நீ மோகினி?

யாருமற்ற சாலையில் யாருக்காகப் பெய்து கொண்டே இருக்கின்றது தெரு விளக்கின் மஞ்சள் ஒளி?
கேட்க காதுகளே இல்லாத இருட்காட்டுக்குள், எதற்காகப் மிகச்சப்தத்துடன் சாய்கிறது இப்பெருமரம்?
பதித்துப் போன பல்லாயிரம் பதிவுகளை தன்னுள் கரைத்துக் கொள்ள எதற்காக பொங்கி வருகின்றது இந்த கடல் அலை?
இரசிக்க மனமே இல்லாத எந்த மனதிற்கு, சோகமாய் இசைத்துக் கொண்டே இருக்கின்றது துளை விழுந்த வன மூங்கில்?
வரவே வராத எந்த தெய்வத்திற்காக நாளெல்லாம் நடக்கின்றது பூஜை?
பார்க்கவே பார்க்காத எக் கண்களுக்காக, வரைந்து கொண்டே இருக்கின்றது இத் தூரிகை?
நடக்கவே நடக்காத எந்தப் பாதங்களுக்காக பாதை அமைத்துக் கொண்டிருக்கின்றது இக் கரங்கள்?
நிரம்பவே நிரம்பாத எந்தக் கிணற்றுக்காக பொழிந்து கொன்டே இருக்கின்றது குளிர் மழை?
காணவே காணாத எந்த உயிருக்காக, உருகி உருகி ஊற்றிக் கொண்டே இருக்கின்றது, என் பேனா....?
அனைவர்க்கும் இனிய காதல் தின நல்வாழ்த்துக்கள்.
Get Your Own Hindi Songs Player at Music Plugin
(யப்பா.. மூச்சு வாங்குது. இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தத் தலைப்புல எழுதவே கூடாது..)
பனி மழை பொழிய...
பாதி புதைந்த திசைகாட்டியின் திசையில் மெல்ல நடை போடுகின்றது, கால் தடங்களை அடுத்த நொடியில் மூடிக் கொள்ளும் பனிப்புயலில் என் கால்கள். கண்கள் மட்டும் வெளியே தெரிய இறுக்கிப் பூட்டிய கம்பளித் தோலணிந்து கொன்டு நான் நடக்கின்றேன்.
வெண்மை பூத்திருந்த பனிப்பரப்பில் எல்லைகளுக்கு அப்பாலும் எட்டிப் பார்க்க, விழிகளைப் பிடுங்கித் தூர எறிகையில், கையில் ஒளி சிந்தும் எண்ணெய் விளக்கை ஏந்திக் கொண்டு நீ நிற்பதை வந்து சொல்லி, மூச்சிரைத்தன, கண்கள்.
'ஊஊ....'வென ஊதற்காற்று அடித்துக் கொண்டே இருக்கின்றது. மினுக் மினுக்கென மின்னும் தொலைவின் ஒளித் தூளை நோக்கி நான் நடந்து வந்து கொண்டே இருக்கின்றேன். பனித் துகள்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றன. தூர மலை முகடுகளின் நுனிகளைக் கவிழ்த்துப் போட்ட பனி மூட்டைகள், உருண்டோடி சமதளத்தை அடைகையில் என் கால் தடத்தில் கொஞ்சம் இளைப்பாறுகின்றன.
கையில் ஊன்றிய தடிக்கும் குளிரெடுத்துப் போனது போல், நடுங்கத் தொடங்கியிருந்தது. பச்சை நிறப் பூக்கள் போல் ஆங்காங்கே பூத்திருக்கும் புற்களும் இப்போது புதைந்திருந்தன.
வெண் துகள்கள் வேகமாய் வீசிய போது, எங்கேயும் சிக்காமல் தப்பி என்னை அடைந்தது, நீ காத்திருக்கும் செய்தியோடு நெருப்புப் பொறி.
இதோ, இன்னும் சில மணிகள் தான் எனும் போது, உனது குடிசையை உள் வாங்கத் தொடங்கியது பனிமழை. எனது இதயத் துடிப்போடு போட்டியிட்டுக் கொண்டு, விளக்கின் ஒளி துடிக்கத் தொடங்கியது.
வேக வேகமாக நடக்கத் தொடங்கினேன். விரல்கள் விறைத்துப் போன பின், நடை பழகும் கால்கள் போல் நடப்பதற்கே நடுங்கினேன். பள்ளத்தாக்கில் பாய்ந்து வரும் வெண்ணீராய் விரைந்து அடைந்தேன்.
குடிசையின் கூரைகளில் கூடு கட்டத் தொடங்கிய வெண் அரக்கனை விரட்டத் தொடங்கினோம். மெல்ல மெல்ல சூட்டை ஏற்படுத்திக் கொண்ட தீப்ப் பொறிகளின் கூட்டம் பெரு நெருப்பானது.
உருகி உருகி ஓடத் தொடங்கியது நம்மை போர்த்தியிருந்த பனி.
முழுதும் கரைந்து ஓடியபின் இறுக்க மூடிய வீட்டிற்குள், நாம் சொல்லிக் கொண்டோம்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin
வெண்மை பூத்திருந்த பனிப்பரப்பில் எல்லைகளுக்கு அப்பாலும் எட்டிப் பார்க்க, விழிகளைப் பிடுங்கித் தூர எறிகையில், கையில் ஒளி சிந்தும் எண்ணெய் விளக்கை ஏந்திக் கொண்டு நீ நிற்பதை வந்து சொல்லி, மூச்சிரைத்தன, கண்கள்.
'ஊஊ....'வென ஊதற்காற்று அடித்துக் கொண்டே இருக்கின்றது. மினுக் மினுக்கென மின்னும் தொலைவின் ஒளித் தூளை நோக்கி நான் நடந்து வந்து கொண்டே இருக்கின்றேன். பனித் துகள்கள் பொழிந்து கொண்டே இருக்கின்றன. தூர மலை முகடுகளின் நுனிகளைக் கவிழ்த்துப் போட்ட பனி மூட்டைகள், உருண்டோடி சமதளத்தை அடைகையில் என் கால் தடத்தில் கொஞ்சம் இளைப்பாறுகின்றன.
கையில் ஊன்றிய தடிக்கும் குளிரெடுத்துப் போனது போல், நடுங்கத் தொடங்கியிருந்தது. பச்சை நிறப் பூக்கள் போல் ஆங்காங்கே பூத்திருக்கும் புற்களும் இப்போது புதைந்திருந்தன.
வெண் துகள்கள் வேகமாய் வீசிய போது, எங்கேயும் சிக்காமல் தப்பி என்னை அடைந்தது, நீ காத்திருக்கும் செய்தியோடு நெருப்புப் பொறி.
இதோ, இன்னும் சில மணிகள் தான் எனும் போது, உனது குடிசையை உள் வாங்கத் தொடங்கியது பனிமழை. எனது இதயத் துடிப்போடு போட்டியிட்டுக் கொண்டு, விளக்கின் ஒளி துடிக்கத் தொடங்கியது.
வேக வேகமாக நடக்கத் தொடங்கினேன். விரல்கள் விறைத்துப் போன பின், நடை பழகும் கால்கள் போல் நடப்பதற்கே நடுங்கினேன். பள்ளத்தாக்கில் பாய்ந்து வரும் வெண்ணீராய் விரைந்து அடைந்தேன்.
குடிசையின் கூரைகளில் கூடு கட்டத் தொடங்கிய வெண் அரக்கனை விரட்டத் தொடங்கினோம். மெல்ல மெல்ல சூட்டை ஏற்படுத்திக் கொண்ட தீப்ப் பொறிகளின் கூட்டம் பெரு நெருப்பானது.
உருகி உருகி ஓடத் தொடங்கியது நம்மை போர்த்தியிருந்த பனி.
முழுதும் கரைந்து ஓடியபின் இறுக்க மூடிய வீட்டிற்குள், நாம் சொல்லிக் கொண்டோம்...

Get Your Own Hindi Songs Player at Music Plugin
Subscribe to:
Posts (Atom)