Friday, June 01, 2007

வாரத்தின் மறுகரை.

வெயிலில் புலரும் நீண்ட நிழலைப் போல் தெரிகிறது ஒரு வாரம்.

நெளிந்து நெளிந்து செல்கின்ற மலைப் பாம்பாய் மெதுவாய் நகர்கின்றன நாட்கள்.

கடும் இருள் பாறைகளின் நடுவே கசிகின்ற குளிர் நீர்த் துளிகளாய், அவ்வப்போது மட்டும் தெரிகின்ற மகிழ் நேரங்கள்.

என்னைப் பிடித்து உறிஞ்சுகின்றது ஐந்து கரங்களால் பெரும்பூதமாய் காலங்கள்.

உணர்ந்து விழித்தெழும் போதுகளில் தோன்றும் தொலைத்து விட்ட இனிய காலங்கள் என்று, தோன்றும் போது வீணாக்கிக் கொண்டிருக்கும் இந்நேரங்கள் என , விறிவிறுவென என்னுள் ஊடுறுவுகின்றன சில கேள்விகள்.

என்ன தவம் செய்தனை இந்நிலை எய்த என்று இறுமாப்பூதும் நிலையில், இருத்திருக்கவில்லை , முன்னொரு காலத்தில் கொண்டிருந்த பெரும்புகழ்.

ஒருகரை, மறுகரை என்று பயணித்துக் கொண்டிருக்கையில் , முன்னம் கடந்த நீர் இதுவல்ல என்று உணர்த்த நகர்ந்து கொண்டேஇருக்கின்றன, வாரத்தின் நாட்கள்.

No comments: