Tuesday, June 05, 2007

அதனைப் போல் இருந்தோம்.. அதனாலே பிரிந்தோம்.


தனைப் போல் இருந்தோம்?
எதனாலே பிரிந்தோம்?

அலையும், கரையும் போல்,
கரையும், நுரையும் போல் இருந்தோம்.

கலையும் மேகம் போல்,
காற்றாலே பிரிந்தோம்.

வழியும், நிழலும் போல் இருந்தோம்.
இருளாலே பிரிந்தோம்.

கண்ணும், கனவும் போல் இருந்தோம்.
ஒரு விழிப்பாலே பிரிந்தோம்.

மலரும், பனியும் போல் இருந்தோம்.
கதிராலே பிரிந்தோம்.

மனதும், நினைவும் போல் இருந்தோம்.
நீ மறந்ததினால் பிரிந்தோம்.

உனையும், எனையும் போல் இருந்தோம்.
நீ உதறிப் போனதால் பிரிந்தோம்.

No comments: