Tuesday, January 22, 2008

இது ஒரு காதல் கதை...? - 1

Part2
Part3
Part4
Part5

They lived happily thereafter.

But....

'ரு மாலை இளவெயில் நேரம்..'

அருண் கவிழ்ந்து இருந்த செல்போனை எடுத்து பார்த்தான். அம்மா. மினுக் மினுகென்று மின்னிக் கொண்டிருந்த டிஜிட்டல் வாட்சில் நேரம் பார்த்தான். 5:30.

"சொல்லும்மா.."

"என்னடா தூங்கிட்டு இருந்தியா? டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?"

"இல்லம்மா. குளிச்சிட்டு, பூஜா ரூம்ல காயத்ரி மந்திரம் சொல்லிட்டிருந்தேன். நம்பறயா..?"

"கோவிச்சுக்காத கண்ணு. வேற எப்ப ஃபோன் பண்றது, சொல்லு. எப்ப பண்ணாலும் ஆஃபீஸ்ல இருக்கேன்னு சொல்லிடற. நைட் எப்ப பண்ணாலும் ஆபீஸ்லயே இருக்கற. அதான் இப்ப பண்ணினேன். இப்படி ஒடம்ப கவனிச்சுக்காம ஆஃபீஸே கதினு இருக்காதப்பா. இதுக்குதான் ஒரு கல்யாணத்தைப் பண்ணிப் பாக்கணும்னு கேட்டுக் கிட்டே இருக்கேன். நீயும், உங்கப்பாவும் கேக்கவே மாட்டேங்கறீங்க..."

"சுத்திச் சுத்தி கல்யாணத்துக்கு வராதம்மா. நான் எத்தன தடவை சொல்லிட்டேன். I have to meet my girl. அதுவரைக்கும் நோ கல்யாணம். நோ வாழை மரம்."

"போடா...! நீ எப்ப பொண்ணு பாக்கறது. நான் எப்ப.."

"சரி.. சரி.. ஆரம்பிச்சுடாத. அப்பா கிட்ட இருக்காரா. இந்நேரம் வாக்கிங் போய்ட்டு வந்திருக்கணுமே?"

"எல்லாம் வந்திட்டாரு. இந்தா பேசு.."

"ஹாய் டாட்.."

"என்னடா.. உங்கம்மா மறுபடியும் கல்யாணப் பேச்சை ஆரம்பிச்சுட்டாளா..?"

"பாருங்க டாட். எப்ப பார்த்தாலும் மேரேஜ் பத்தியே பேசுறாங்க. நான் தான் ஆல்ரெடி சொல்லிட்டேனே, நானே ஒரு பொண்ணைப் பார்க்கணும். பார்த்தவுடனே அப்படியே ஜிவ்வுனு பறக்கற மாதிரி அழகா இருக்கணும். மாடர்னா இருக்கணும். ஆனா மங்களகரமா இருக்கணும். சுடிதார் தான் போட்டிருக்கணும். ஆனா சூப்பரா இருக்கணும். அட்லீஸ்ட் சிக்ஸ் மந்த்ஸ் லவ் பண்ணனும். அதுவரைக்கும் Marriage is Drainage. Who falls in are Garbage."

"போதும்டா. நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் பார்த்துக்கறேன் உங்கம்மாவை. நீ உன்னோட டேஸ்ட்க்கு பாரு. ஆனா கொஞ்சம் சீக்கிரம்... ஓ.கே.வா? உங்கம்மா மூட் அவுட் ஆகி இருக்கா. நான் போய் சமாளிக்கறேன். பை. டேக் கேர்.."

மீண்டும் கண் விழித்துப் பார்க்கையில், 6:10 மணி. பரபரப்பாக எழுந்து பாத்ரூம் போய் விட்டு வந்து, டிராக் சூட் எடுத்து மாட்டிக் கொண்டு, பீச்சுக்கு கிளம்பும் போது சரியாக காலை 6:30 மணி.

னிக் கிழமை மாலையின் அலங்காரத்துடன் ஸ்பென்சர் ப்ளாசா மின்னிக் கொண்டிருந்தது.

அருணும், சஞ்சயும் ஸ்ப்ளெண்டரில் வந்து என்ட்ரென்ஸில் நுழைந்தார்கள்.

"அருண்..! ஹோல்ட் ஆன்! நிறுத்து. நான் போய் எந்த ஃப்ளோர் போகலாம்னு பார்த்திட்டு கால் பண்றேன். நீ இந்த கூட்டத்தில கரெக்டா பார்க்கிங் ஸ்பேஸ் கண்டுபிடிச்சு நிறுத்திட்டு வந்திடு.." என்றான் சஞ்சய்.

அருண் சடாரென ஓரம் கட்ட ஃலெப்ட் பக்கமாய் ஒடிக்க, பின்புறம் 'க்ரீச்' என சத்தம். திரும்பிப் பார்த்தார்கள்.

பிங்க் பெப் சரிவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இரண்டு பேர் வந்திருப்பார்கள் போல் இருக்கின்றது. இடப்பக்கமாய் சாய்ந்து கால்களை ஊன்றி நிற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

சஞ்சய் உடனே ஓடிப் போய் பெப்-ஐ தங்கிக் கொண்டான்.

"ஸாரிங்க.." என்றான்.

"டேய்.. நீ எதுக்குடா சாரி கேக்கற. அவங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண ட்ரை பண்ணினது அவங்க தப்பு." அருண்.

ஓட்டி வந்த பெண் அருணை நிமிர்ந்து பார்த்தாள்.

"நாங்க லெஃப்ட்ல க்ராஸ் பண்ண வந்தது எங்க தப்பு தான். அந்தப்பக்கம் பாருங்க. ஆப்போஸிட்ல ஒரே ரஷ். அதுவும் ஜென் ரெண்டு கார் வரிசையாய் வந்ததினால தான் நாங்க லெப்ட்ல திரும்பப் பார்த்தோம். இது ஸ்டாப்பிங் ப்ளேஸ் கிடையாது. நீங்க ஸ்டாப் பண்ணி இருக்கவே கூடாது. ஓ. கே. ஸ்டாப் பண்ண ட்ரை பண்றீங்க். அப்ப என்ன பண்ணி இருக்கணும். பின்னாடி யாராவது வர்றாங்களானு பார்த்திருக்கணும். அதுவும் செய்யல. ஹெல்ப் பண்ண வர்றவரையும் தடுக்கறீங்க..."

பொரிந்தாள் அவள்.

'ஆமா, அவன் எதுக்கு ஹெல்ப் பண்றான்னு தெரியாதா..' முனகினான் அருண். தப்பு தன் பேரில் தான் என்று தெரிந்திருந்ததால், அமைதியாக முனகினான்.

பின், ஸ்ப்ளெண்டரை ஸ்டார்ட் செய்து, செக்யூரிட்டி துணையுடன் பார்க்கிங் ஸ்பாட்டுக்குச் சென்று நிறுக்தினான். நிறுத்தி விட்டு வெளியே வருகையில், 'சரக்'.

மீண்டும் அதே பெப்.

"என்னங்க.. ஆள் வர்றது தெரியாம, வர்றீங்க.." ரிவர்ஸ் அட்டாக் அடித்தான்.

"ஓ.. சாரிங்க. இப்ப தப்பு என் மேல் தான். சாரி."

"அதெப்படி சும்மா sorry கேட்டா விட்ருவோமா? இதே பசங்க தெரியாம வந்து இடிச்சுட்டா கூட, ஊரையே கூட்டிடறீங்களே. இதை சும்மா விடப் போறதில்ல. செக்யூரிட்டி.." விடுவதில்லை இதை என்று முடிவே செய்திருந்தான்.

"சார்.. விடுங்க.. இனிமேல் இந்தப் பக்கம் வர்றதில்லைனு முடிவே பண்ணிடறேன். ஓ.கே.வா..?"

"எனக்கென்ன இதில் ஓ.கே.? செக்யூரிட்டி, இந்த மாதிரி பிஸ்கட் வண்டியெல்லாம் ஸ்ப்ளெண்டர் பக்கமா நிறுத்த எப்படி allow பண்றீங்க.."

பிஸ்கட் வண்டி என்று சொன்னதில் அவள் முகம் சுருங்கி போனதில், அவனுக்கே கொஞ்சம் வருத்தமாகி விட்டது. கொஞ்சம் ஓவராகத் தான் சொல்லி விட்டோமா?

"Leave it" என்றபடி திரும்பி நடந்தான்.

ப்ளாஸாவின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தான். என்ட்ரென்ஸைக் கடக்கையில் யாரோ தன்னை உற்றுப் பார்ப்பது போல் உணர்ந்தான். சடாரென இடதுபுறம் திரும்பிப் பார்க்க, இரு கண்கள். இரு கண்கள் மட்டுமே தெரிந்தன.

மஞ்சள் துப்பட்டாவில் முழுவதுமாக மூடிய முகம். கண்கள் மட்டும் வெளியே தெரிந்தன. அவனையே உற்றுப் பார்ப்பது நன்றாகவே உணர்ந்தான். வேறு எதையும் அவனால் பார்க்க முடியவில்லை. எங்கே இருக்கிறோம், யாருடன் இருக்கிறோம், இது என்ன நேரம், இது என்ன ஆண்டு எல்லாம் மறந்து போனது. நினைவுகள் அப்படியே உறைந்து போயின. எங்கோ சுழலில் சுழல்வது போல் இருந்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ.. கொஞ்சம் மூவ் பண்றீங்களா.." குரல் எங்கோ, எப்போதோ கேட்பது போல் கேட்டது. யாரோ மெல்ல தள்ளி விட்டு செல்ல, தடுமாறி விழப் பார்த்தான். அருகில் இருந்த கதவை பிடித்துக் கொள்ள நிலை நின்றான். அந்த வாசலில் அமர்ந்தே விட்டான்.

நினைவுகள் மெல்ல மெல்ல திரும்பின. வெளியே அடித்துக் கொண்டிருந்த சென்னையின் வெப்பக் காற்றும், பிளாசாவின் உள்ளிருந்து வந்து கொண்டிருந்த ஜில் காற்றும் , மாறி மாறி நினைவுகள் சென்று கொண்டிருந்த அவனது நிலையை ஒத்திருந்தன.

தடாரென அந்தக் கண்கள் இருந்த திசையைப் பார்த்தான். அவள் இல்லை.

சுற்று முற்றும் தேடிப் பார்த்தான். இல்லை.

செல் மினுக்கியது. சஞ்சய்.

"அருண், எங்கடா இருக்க. பார்க் பண்ணிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா? பார்க் போய் பார்க் பண்ணப் போய்ட்டியா?"

"மொக்க போடாத. உங்கிட்ட ஒண்ணு சொல்லணும். எங்க இருக்கே...?"

"வேறெங்கே இருக்கப் போறேன்? லேண்ட்மார்க் வந்திடு. செம ஜாலியா இருக்கு. ஒரு இடத்துல நின்னு முழு புக்கையுமே படிச்சிடறாங்க. நமக்கு எதுக்கு புக் படிக்கிற வேலை எல்லாம். சிடி ஸ்டால் பக்கமும், புக்ஸ் பக்கமும் சுத்திக்கிட்டே இருக்கேன். சும்மா சொல்லக் கூடாதுடா. பொண்ணுங்களுக்கு படிக்கிற ஆர்வம் அதிகமாகிட்டே போகுது. நமக்கும் நல்லது தான். அதிலயும் ஒரு கையில கரடி பொம்மை வெச்சிக்கிட்டு, ஹாரி பாட்டர் புக் வாங்கியிருக்கிற பொண்ணு போட்டிருக்கிற டீ ஷர்ட் என்ன சொல்லுதுனா..."

"Stop it, Man. நீ அங்கயே இரு. நான் உடனே வர்றேன்." செல்லை கட் செய்து வைத்தான்.

லேண்ட்மார்க் புத்தகங்களாலும் கை படாத சி.டி.களாலும் நிரம்பி இருந்தது. பின்னிசையாக Bryan Adams.

"உண்மையா தான் சொல்றியாடா? எனக்கு அந்த மாதிரி feeling எல்லாம் வர்றதில்லடா. எனக்கு வேற feeling எல்லாம் வேற. அப்படி தான் போன வாரம் டெல்லி போகும் போது, ஜி.டி.ல அப்பர் பெர்த்ல..."

"சஞ்சய். This is limit. இது வேற மாதிரிடா. "

"புரியுது. இப்ப என்ன? அந்தப் பொண்ணை, ஓ சாரி, அந்தக் கண்களை இந்தப் ப்ளாசாவில எங்கனு தேடிக் கண்டுபிடிக்கணும். அவ்ளோ தானே. விடு கவலைய. எங்க போயிருப்பாங்க. இங்க பொண்ணுங்க போகற மாதிரி இருக்கற ஷாப்ஸே கொஞ்சம் தான். மியூசிக் வேர்ல்டு போகலாம். காஃபி ஷாப் போகலாம். வேற ஏதாவது க்ளாத் ஷாப் போகலாம். கிளம்பு."

எலிவேட்டர்களில் மேலும் கீழும் பிரயாணித்தார்கள். ஆங்காங்கே பொறியும் சோளப் பொறி வாங்கிக் கொறித்தார்கள். காஃபி ஷாப்பில் Cold Coffee உறையும் வரை காத்திருந்து குடித்தார்கள். துணிக்கடைகளில் நுழைந்து புடவைகளைத் தடவிப் பார்த்து விற்பனையாளரின் கேள்விப் பார்வைக்கு அசடு வழிந்தார்கள். Music World-ல் எம்.எஸ். கலெக்க்ஷன் பட்டியலைப் படித்துப் பார்த்தார்கள். லேண்ட் மார்க்கில் சி.டி.க்களை சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். புத்தகங்களின் பக்கங்களை விசிறி அடித்தார்கள்.

"என்னடா.. எங்கயாவது பார்த்தியா?"

உதட்டுப் பிதுக்கலையே பதிலாய்க் கொடுத்தான் அருண்.

ரவு 8:30.

"அருண்.. விடுடா. அவளை மறுபடியும் பார்க்கணும்னா எப்படியும் பார்ப்போம். இப்ப கிளம்பலாம். வா. டைம் ஆச்சு." என்றான் சஞ்சய்.

"இன்னொரு முறை Music World போய்ப் பார்த்திட்டு வந்திடுவோமா..?" பரிதாபமாகக் கேட்டான் அருண்.

"உன்னைப் பார்த்தாலும் பாவமா இருக்கு. சரி, வா. போய்ட்டு வரலாம்."

"Leave it டா. ஒரு நல்ல படத்துக்குப் போறோம்.ஜாலியா எஞ்சாய் பண்றோம். வெளியே வந்தவுடனே கொஞ்ச நேரத்தில, மறந்திடறோம் இல்லையா? அதுபோல இதையும் நினைச்சுக்கிட்டு பைக்கை எடு கிளம்பலாம்."

சோகம் கவ்விய முகத்தோடு பார்க்கிங் ஸ்பேஸுக்கு வந்தார்கள்.

அவன் ஸ்ப்ளெண்டருக்கு முன்னால் அந்த பெப் தலை சாய்த்து நின்று கொண்டிருந்தது.

சோகம், அலைச்சல், எரிச்சல், பைக் எசகு பிசகாக நின்று கொண்டிருக்க எடுக்க முடியாத நிலைமை எல்லாம் சேர்ந்து வர, ஒரே உதை விட்டான் அருண்.

"என்ன பண்றீங்க? எவ்ளோ தைரியம் இருந்தா எங்க பெப்-ஐ இப்படி பண்ணுவீங்க.." அவளே தான். வேகமாக வந்து கொண்டிருந்தாள்.

இந்த மூஞ்சியைப் பார்த்திட்டதால தான் இப்படி ஆகி விட்டது. வார்த்தைகளில் காரம் ஏற ஆரம்பித்தது.

"உங்களை யாரு இங்க நிறுத்தச் சொன்னது? இப்ப நான் எப்படி என்னோட பைக் எடுக்கறது..?"

"அதுக்காக இப்படி தான் பண்றதா? Tribal Dog " என்று கடைசியாக முனகினாள்.

"என்ன சொன்னீங்க? Come Again" பரபரத்தான் அருண்.

"Nothing..".

பிறகு செக்யூரிட்டி வந்து சண்டையைப் பிரித்து சமாதானப் படுத்தி வைக்க, அவள் பெப் எடுத்தாள். அதற்குள் அவளது செல் அடிக்க ஆரம்பித்தது.

வேண்டுமென்றே பாதி வழியில் நிறுத்தி விட்டு, செல்லை எடுத்தாள்.

" ஆமாம்டா.. இங்க ஒரு சின்ன பிரச்னை. அதே பார்ட்டி தான். வரும் போது பிராப்ளம் பண்ணினானு சொன்னேன்ல அதே தான். இப்ப ஒண்ணும் இல்லை. நீ அங்கயே வெய்ட் பண்ணு. நான் வந்துகிட்டே இருக்கேன்..."

அவள் மெதுவாக பெப் எடுத்து, ஸ்டார்ட் செய்து வெளியேறினாள்.

பின் அவனும் ஸ்ப்ளெண்டர் எடுத்து வெளியே வர, அதுவரைக்கும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சஞ்சய்,

"என்னடா இப்படி நடந்துக்கற. பொண்ணுங்க கிட்ட இப்படி Harsh-ஆ நடந்துகிட்டேனு வை. ஒண்ணும் நடக்காது.."

தூரத்தில் அந்த பெப் நகர்ந்து கொண்டிருந்தது. பெப்பின் பின் சீட்டில்...

பின் சீட்டில்..

அதே மஞ்சள் சுடிதார்.

"டேய்.. அவ தான்டா.. அந்த பெப் பின்னாடு உட்கார்ந்துகிட்டு போறாடா. My God. நான் அந்தப் பொண்ணு கிட்ட அப்படி நடந்துகிட்டேனே. அவளோட friend போல இருக்குடா.."

"அந்தப் பொண்ணா..? அவளைத் தான் இவ்ளோ நேரமா தேடிட்டு இருந்தியா..? நான் வரும் போதே பார்த்துட்டேனே.."

"எப்படா பார்த்த.. நான் கவனிக்கவே இல்லை.."

"நீ தான் சண்டை போடறதுலயே Busy-யா இருந்தியே.."

அருண் பார்த்துக் கொண்டேயிருக்க, அந்த மஞ்சள் சுடிதார் திரும்பியது. இப்போதும் வெறும் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தது. அவனையே பார்த்தது. கண்கள் சிரித்தன. அருண் சிலிர்த்துப் போனான். முன்னேறிப் போக முடியாமல், நெரிசல் அள்ளியது.

"போறாங்கடா.. போறாங்க.. போய்ட்டாங்க.."

பெப் அண்ணா சாலையின் பூச்சிகளில் ஒன்றாகக் கலந்தது.

" Dont worry தம்பி. யாமிருக்க பயமேன்? தேடிக் கண்டுபிடிச்சிடலாம் விடு."

"என்ன உளர்ற? இவ்ளோ பெரிய சென்னையில எத்தனை பெப் இருக்கு. எப்படிக் கண்டுபிடிப்பது?"

"எத்தனையோ இருக்கலாம். ஆனா ஒரு பெப் மட்டும் தான் இந்த number-ரோட இருக்கும், இல்லையா?"

பார்க்கிங்குக்கு கொடுத்த ரசீதுச் சீட்டைக் காட்டினான். அதில் ஒரு டூ-வீலர் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் இருந்தது.

"இதை எப்படா எழுதுன..?" ஆச்சரியத்துடன் கேட்டான் அருண்.

"இதுக்கு தான் experienced ஆளு தேவைங்கறது."

ஒரு நொடி ஆச்சரியத்தில் மூழ்கிப் போனவன், மறு நொடியில் சந்தோஷம் அள்ள, அதிர அதிர சிரித்தான் அருண்.

- தொடரலாமா?

4 comments:

Anonymous said...

வசந்த்
இது எனக்கு சொன்ன மாதிரியே இருக்கு .அப்படியா . ஓ.கே. ஓ .கே.

PPattian said...

இது தொடருமா? நல்லா இருக்கு

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் ஐயா...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

புபட்டியன் ஐயா...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

தொடரும்... ;-)

இரா. வசந்த குமார். said...

புபட்டியன் ஐயா...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

புபட்டியன் ஐயா...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்.

தொடரும்... ;-)