Friday, January 02, 2009

HNY - A.D.2K9.

னைவர்க்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.



ரு குறுந்தொகைப் பாடலைப் பார்ப்போம்.

பாடியவர்: கங்குல் வெள்ளத்தார். திணை: முல்லை. துறை: பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி வன்புறைஎதிர் அழிந்து கூறியது.

எல்லை கழிய, முல்லை மலரக்,
கதிர்சினம் தணிந்த கையறு மாலை,
உயிர்வரம் பாக நீந்தினம் ஆயின்,
எவன்கொல் வாழி?-தோழி!-
கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!

தோழி! பகற்பொழுதும் கழிந்து போயிற்று; முல்லையும் மலரத் தொடங்கி விட்டன; கதிரவனது வெப்பமும் தணிந்தது; மகளிர் செயலறுதற்கு உரியதாகிய இம்மாலைக் காலம், என் உயிர் கழிதலையே தனக்கொரு வரம்பாகக் கொண்டு வந்து என்னை மிகவும் வருத்துகின்றது. இரவாகிய வெள்ளமோ கடலினும் பெரிதாயிருக்கின்றது. யான் வருந்தாது என் செய்வேன்?

கருத்து: 'மாலையும் இரவும் பெரிதாக வருத்துகின்றன' என்பதாம்.

விளக்கம்: 'மாலையை நீந்தலே அரிதாயிருக்க, அதனைக் கடந்ததும் கங்குல் (இரவு) வெள்ளத்துட் சிக்கிக் கழியும் யான், எவ்வாறு ஆற்றியிருத்தல் கூடும்?' என்பதாம். 'உயிர் வரம்பாக நீந்தல்'- உயிர் ஒன்றே எஞ்சுமாறு சோர்வுற்றுத் த்ளர்ந்து கடத்தல். 'கங்குல் வெள்ளம் கடலினும் பெரிது' என்பது, இரவு முழ்தும் துயில் பெறாது வருந்திய துரமிகுதியைக் காட்டுவதாகும். கடல் கடத்தற்கரியது; அதனினும் பெரிது என்றலால், அவளது துயரம்குதியின் அவலம் அறியப்படும்.

விளக்கம் : புலியூர்க் கேசிகனார்.

ருமையைக் குளிப்பாட்டியதால்
ஆகாயம் அழுக்காய்ப் போனது
எங்க ஊர் குளத்தில்.

குடையில் ஓட்டை
ஓட்டையின் வழியே
பேருந்தின் அழும் கூரை.

வீச்சரிவாளில்
மூக்கு சொறிந்து கொண்டது
வீரனார் சிலையில் காக்கை!

விதை விழுந்த விநாடியே
விஷ விருட்சமானது
சந்தேகம்.

உயரே இருந்தது வான்
உச்சியை உரசி நின்றது புற்கள்
எறும்பின் பார்வை.

சக்திகா எழுதிய கடலைக் கழுவும் அருவி என்ற 'ஹைக்கூ' நூலில் இருந்து எடுத்த சில நல்ல வரிகள்.

No comments: