Friday, September 18, 2009

பளிச் செய்தி..!

திருவனந்தபுரம், செப்.18 :

இன்று மாலை மங்கிக் கொண்டு வந்த முன்னிரவு சுமார் 18:40 முதல் 19:00 மணிக்குள் திருவனந்தபுரம் நகரில் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. எமது சிறப்பு நிருபரிடம் அனுபவித்த டெக்னோபார்க்கில் பொட்டி தட்டும் வசந்த் தெரிவித்ததாவது :

"சார்... இன்னும் நடுங்குது..! இன்னிக்கு சாயந்திரம் ஒரு ட்ரீட்டுக்காக அலுவலக சகாக்களோடு அம்ப்ரோஸியா போகலாமா இல்லைன்னா பாஸ்கின் ராபின்ஸான்னு சீரியஸ் டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தேன். ஒரு ஆறரை மணி கிட்டக்க இருக்கும். படபடன்னு செகண்ட் ஃப்ளோரே நடுநடுங்கிச்சு. எல்லோரும் எழுந்திருச்சிட்டாங்க. வி ஃபெல்ட் த வைப்ரேஷன்ஸ். ஒரு ஆறு செகண்ட் தான் அதிர்ச்சி இருந்திச்சு. அப்புறம் மெல்ல அந்த அதிர்வுகள் அடங்கறது, க்யூபிக்கிள் மேல கை வெச்சப்போ ஃபீல் பண்ணினோம். நான் கீழ எறங்கி வந்திட்டேன். கொஞ்சம் பெரிய நல்ல மழை பெஞ்சிட்டிருந்திச்சு. அப்ப தான் நான் கூட ஒருவேள நிலநடுக்கமா இருக்கலாமோனு நெனச்சேன். ட்ரீட் ப்ளான் கேன்சல் ஆகி, எல்லோரும் அவங்கவங்க வீட்டுக்கு கிளம்பிட்டாங்க. நான் மட்டும் விடலையே..! அம்ப்ரோஸியா போய் க்ரிஸ்பி சிக்கன் பர்கர் சாப்பிட்டேன். டி.ஸி. புக்ஸ் ஷாப்புக்கு போய் தேவதாஸிகள் பற்றிய ஒரு புக்கும், டேவிட் இஸட் ஆல்பர்ட் எழுதிய டைம் அண்ட் சான்ஸ் பிஸிக்ஸ் புக்கும் வாங்கினேன்.

நிருபர் குறுக்கிடுகிறார் : சார், எர்த் க்வேக் பத்தி மட்டும் சொல்லுங்க..!)

இருங்க, அதுக்கு தான் வரேன். அப்புறமா மழயிலயே நனஞ்சிகிட்டு போய் ஐ.ஓ.பி. ஏ.டி.எம்ல கொஞ்சம் பைசா எடுத்திட்டு, வழக்கமான பெட்டிக் கடையில செவ்வாழைகளும், சன் ஃபீஸ்ட் ஆரஞ்ச் ஃப்ளேவர்ட் க்ரீம் பிஸ்கட்டும் வாங்கினேன். அப்ப விசாரிச்சா, கடக்காரரும் அப்படித் தான் சொன்னார். கடைல தொங்க வெச்சிருந்த குர்குரே பாக்கெட்டெல்லாம் அவர் மேலயே சரிஞ்சிச்சாம். பட்டத்திலிருந்து கிளம்பிய நடுக்கமாம் இது. அவர் வீட்டுக்கு செல்ல கேட்டப்போ, அவங்க அலமாரி பாத்திரமெல்லாம் விழுந்திடுச்சாம். ஏதோ பெருச்சாளி ஓடியிருக்குன்னு நெனச்சிட்டாங்களாம். சரியான காமெடி இல்ல..? (நிருபர் : ஊஃப்...) ஓ.கே. ஓ.கே..! தமிழ்ச்சங்கர் ஒருவரையும் ஃபோன் பண்ணி கேட்டேன். அவரும் ஆமான்னு சொன்னார். ஸோ, கேரளா கூட இப்ப ஸேஃப் கெடயாது..! கடவுளின் கண்ட்ரிலயே க்வேக்..! எப்பூடி...?"

http://www.technoparktoday.com/2009/09/earthquake-in-trivandrum/

http://aruninte.blogspot.com/2009/09/earthquake-in-trivandrum-kerala.html

http://www.hindu.com/2009/09/19/stories/2009091959380100.htm

updated :: it was a mild tremor and not an earthquake. recorded as in 3.5 scale.

3 comments:

ஆயில்யன் said...

அய்யோ தேவதைகளின் தேசத்தில இறைவனோட டெரரிசமா? நினைச்சாலே உடம்பெல்லாம் உதறுது மனசெல்லாம் பதறுதே :(

thamizhparavai said...

அங்கதான் இல்லாம இருந்தது...அங்கயுமா?

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

ஒண்ணும் கொழப்பமில்லா. இப்பம் சுகம்.

***

அன்பு தமிழ்ப்பறவை...

:)