Tuesday, December 07, 2010

நானே



தேடிய பெருங்கவிதை ஒன்று நெடுங்காலமாய் ஒரு கல்லிடுக்கில் ஒளிந்து கொண்டிருந்தது. தடுக்கிக் கொண்டு கீழே விழுந்ததும் ஒரு சாரையைப் போல மெல்ல எட்டிப் பார்த்தது. அதன் நா நுனியில் வார்த்தைகளின் நஞ்சு தடவப்பட்டிருந்தது. மேனிமேல் ஒரு பளபளப்பான தோல் நிலவொளியில் மினுங்கியது. நாசி வழி வெங்காற்று வெளியே வந்து சுற்றுப்புறத்தைச் சூடாக்கியது. நீல விழிகள் பாரித்த ஒளி, உமிழ்ந்த வேகத்தில் சிறு கற்கள் பொசுங்கின. கைகள் அற்றுக் கால்களும் அற்று மெல்லத் தன்னை அசைத்து வெளியே வந்து நின்றது.

அள்ளி விழுங்கிக் கொள்ளும் யத்தனத்தில் மெல்ல அணுகினேன். செவ்வாய் மேல் காமம் பூசியிருக்க, முத்தமிட்டேன். தீ தீண்டும் சுகம். வழுவழு உடல் தரித்து ஈரம் பதித்த நல் வரிகளால் எழுதப்பட்டிருந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாய் விழுங்கினேன்.

நானே கவிதையானேன்.!!

Pic courtesy :: http://www.allarminda.com/wp-content/uploads/2010/10/poetry2.jpg

2 comments:

thamizhparavai said...

புரியலை பாஸ்....:(

Unknown said...

நல்ல கவிதை. தொடர்ந்து எழுதுங்க