Tuesday, March 07, 2017

புது ஊர்வசி.


ஊர்வசி, ஊர்வசி, you just do it ஊர்வசி,
ஊக்கமின்றி ஓய்ந்திருந்தும், you just do it ஊர்வசி,

வாய்ப்புகள் கொட்டவே, you just do it ஊர்வசி,
வாசலைத் தட்டவே, you just do it ஊர்வசி,

கேளடி ஒளியே, ஒயிலே உலகில் வாய்ப்புகள் நூறு லட்சம்
நீயடி உளியே, சிலையே கொண்டு செல்லடி உனது பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

நாலு பேரு மறுத்து சொன்னா, you just do it ஊர்வசி,
நூறு பேரு எதிர்த்து நின்னா, you just do it ஊர்வசி,
வெட்டி வேலைன்னு யாரும் சொன்னா, you just do it ஊர்வசி,
பொறுப்பே இல்லன்னு ஊரும் சொன்னா, you just do it ஊர்வசி,

கேளடி இன்றே, இங்கே உழைக்கும் கைகள் ஊரை வெல்லும்
நீயடி நின்றால், வென்றால், இமய மலையும் குனிந்து செல்லும

வாழ்க்கையில் வெல்லவே, you just do it ஊர்வசி,
வானவில் வாழ்க்கையில் வெற்றி என்பதே கான்ஸ்டன்ஸி

(ஊர்வசி)

தொட்டதும் வீணை மீட்டாது
தொல்லைகள் இருக்கும் போகாது
பூக்களால் பாதை அமையாது
புதையலோ எளிதில் கிட்டாது

வேர்களில் நீரே தங்காது
வேர்வையில் வீணே கிடையாது
இடையிலே நில்லா துழைத்தாலே
இறுதியில் தோல்வி கிடையாது.

இலக்கு ஒன்றை இருத்திக் கொண்டு, you just do it ஊர்வசி,
அதற்கும் மேலே ஆசைப் பட்டு, you just try it ஊர்வசி,
முட்டி நிற்கும் குட்டி சுவரை, you just break it ஊர்வசி,
முயற்சி செய்து முழுமை கொள்ள, you just live it ஊர்வசி,

(ஊர்வசி)

இளமையில் உழைப்பே இல்லாமல்
இருந்திட வாழ்ந்தும் என்ன பயன்?
இதயத்தில் துடிப்பே இல்லாமல்
இருப்பவர்க் குலகில் என்ன பெயர்?
விளக்குகள் சுடரே ஏந்தாமல்
விலகுமா அறையைச் சூழ்ந்த இருள்?
விடியலை நோக்கிப் போகாமல்
விழுந்துமே கிடந்தால் என்ன பொருள்?


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல்...!

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் தனபாலன் சார்..