Tuesday, September 26, 2006

மீண்டும் ஒரு நிலாச்சாரல்!

வானம் இருட்டிக் கொண்டிருந்தது. விடிந்து ஏழு மணி ஆகிவிட்டது என்பதாகத் தோன்றவில்லை. மேற்கிலும், கிழக்கிலும் கருமையான மேகங்கள் திரண்டிருந்தன. விரைவில் வானம் பொத்துக் கொள்ளும் போல் இருந்தது.

ரங்கசாமி சலிப்பாகத் திண்ணையில் அமர்ந்தார்.

வயதானவர் தான். ஊரிலேயே சற்று மரியாதையான மனிதர். கொஞ்ச காலம் ஊர்ப் ப்ரெசிடெண்ட் ஆக இருந்தவர். கிராமத்துக்கே உரிய கருத்த தேகக் கட்டு. முறுக்கிய தலைப்பாகை. மெல்ல வலதுகையை நெத்தியில் வைத்து, கண்களைச் சுருக்கி தூரத்தில் பார்த்தார். வெள்ளை நாரைக் கூட்டம் பறந்து புள்ளியாய் மறைந்தது.

"பாவாயி..பாவாயி.."

"வர்றேனுங்க.." என்றபடி ஓடி வந்தார் அந்த அம்மாள்.

1 comment:

Anonymous said...

?????????????????????????