Sunday, May 13, 2007

எஸ்.பி.பி.


தேன் குரல் தேவன் எஸ்.பி.பி அவர்களின் தேவார்மித குரலில் மயங்கிய பல லட்சக்கணக்காண நேயர்களில் ஒருவனாக இப்பதிவை இடுகிறேன்.

நேற்று ஜெயா டி.வி.யில் அவரது 'என்னோடு பாட்டு பாடுங்கள்' நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. என்ன குரல் வளமை..! இத்தனை பாடல்களுக்குப் பிறகும், பிசிறு தட்டாமல், சிதறாமல் நெடுஞ்சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும் பயணம் போல் அவ்வளவு மென்மை. சாந்தம். மற்ற குரல்களைக் கேட்கையிலேதோ ஒன்று குறைவது போலவும், வட்டம் முழுமை பெறாமல் இருப்பது போலவும் தோன்றும். இவரது குரலில் பாடல்கள் கேட்கையில், ஒரு பரிபூரணம். ஒரு நிம்மதி. ஒரு சந்தோஷம். மிகச் சரியாகக் கூற, நிறைவு. மனதில் ஒரு நிறைவு ஏற்படுத்தும் வசியக் குரல்.

அதோடு சென்னை மாநகரில் எங்கும் காண முடியாத 'தாவணி போட்ட தீபாவளிகளை'க் கண் குளிர காண முடிவதில், என்னுடைய விருப்ப நிகழ்வாக மாறி விட்டது.

பின் விஜய் டி.வி.யில் உலா வருகையில், எஸ்.பி.பி. அவர்களும், கங்கை அமரன் அவர்களும் 'காபி வித் அனு' நிகழ்வில் பேசிக் கொண்டிருந்தார்கள். அருமையான நிகழ்வாக அமைந்தது.

உங்களுக்கான சில தொடர்க் கண்ணிகள் :

எஸ்.பி.பி. அவர்களின் இணைய முகவரி.

அற்புதமான பாடல்களின் தொகுப்பு.

No comments: