Monday, May 14, 2007

கூவக்கரையாண்ட...!

"ம்ஹூம்..! இந்த வூட்டுல எது என்ன மதிக்குது? கொஞ்சம் வயசானாப் போதும், செத்த எலி கணக்காத் தான் ட்ரீட் பண்றானுங்கோ! ரொம்ப ஆடாதீங்கடா! அப்பாலிக்கு ஒம் புள்ளங்களும் ஒங்கள அப்படித்தான் நடத்தும்.." பெருசு பொலம்பிக்கினே போச்சு.

"இன்னாத்துக்கு இது இப்புடி இஸ்துக்கினு, பொலம்பிக்கினு போகுது. வயசானேலே படா பேஜாருப்பா! புள்ளங்க பெருசாய்ட்டா, ஓரமா போய் ஒக்காந்துக்கினமா, வேளா வேளக்கு நாஸ்டா துன்னமானு இல்லாம, சொம்மா அது நொள்ள, இது நொட்டனு சொல்லிகினே கீறது...." கபாலி ரொம்ப வெசனப்பட்டான்.

"அத்த வுடு கபாலி! ஒனக்கொரு மேட்டர் தெர்யுமா..?" இது பக்கத்து வூட்டு கஜா. செம சோக்காளி. படா தாதா. ஏரியாவுக்குள்ள எவனாவது எதுனா புச்சா வாங்கினு வந்துரக் கூடாது. இவனுக்கு மூக்கு வேத்துரும். அப்பாலிக்கு டைம் பாத்து கபால்னு வூட்டுக்குள்ள பூந்து, ஆருக்கும் தெர்யாம, அட்ச்சுகினு வந்துடுவான்.

"இன்னா மாமு..? இன்னா மேட்டரு..?"கபாலிக்கு கஜா கையாண்ட பேசறதுனா செம குஜால்தான். இப்டியொரு சப்போட்டு கபாலிக்கு கீதுனு அல்லார்க்கும் தெர்யுங்கறதுனால, ஆரும் கபாலியாண்ட ப்ராப்ளம் பண்ண மாட்டாங்கோ.

"ஸ்ட்ரெயிட்டா மேட்டருக்கு வரேன். நேத்து, முனியன் வூட்டு கிச்சனாண்ட நம்ம மாரி போய் நோட்டம் வுட்டுகினு இருந்திருக்கான். அப்ப உன்ன போட்டுத் தள்ள அவன் ப்ளான் போட்டுக்கினு இருந்தானு மாரி நம்ம கையுல சொன்னான். அத்த நான் உன் கைக்கு பாஸ் பண்ணிவுட்டேன்.." கஜா எப்பவுமே கொஞ்சம் பெரிய வூட்டாண்ட தான் கண்ணு வெக்கிறதே. அதனால் ஏரியாவுல எதுனா விசேசமா நடந்துதுனா, அவன் கையுல வராம எங்கியும் போகாது. அவன் ஸோர்ஸ் அப்புடி.

"இன்னா கஜா..? இது ஒரு சப்ப மேட்டரு. இதுக்கு போய் என்னமோ பெருசா பிலிம் காட்டுற..? உன்னாண்ட இருக்கும் போது, எவனாவது எம்மேல கை வெச்சுற முடியுமா..?"


"அதுக்கில்ல கபாலி! டைம் சரியில்ல. போன வாரம் இப்டித் தான் உதார் உட்டுகினு இருந்த மணியப் போட்டுத் தள்ளிட்டாங்க. என்கவுண்ட்டர்னு சொல்லிகினு தனியா மாட்டுனா காலி பண்றங்கோ! எதுக்கும் கொஞ்சம் உசாரா இருந்துக்கோ. அப்பால பாக்கலாம். இந்த ஏரியா கவுன்சிலரு வூட்டாண்ட புதுசா பத்து மூட்ட வந்து எறங்கியிருக்காம். நான் போய் ஒரு தபா இன்னா, ஏதுனு ஒரு லுக் வுட்டுகினு வந்துரேன்பா. இன்னா..?"

"மூட்டனா... நம்ம சரக்கு தான...?"

"ஆமா.. அதே தான். ஸ்ட்ரெய்ட்டா அந்தாண்ட எங்கியோ தஞ்சாவூருக்கு கிட்டக்க இருந்து வந்துருக்காம்..."


"கஜா..! நாமெல்லாம் எப்ப அங்க எல்லாம் போறது. காலம் பூரா இந்தக் கூவம் ஓரத்துலயே தான் இருக்கணுமா..?"

"அய்ய..! இன்னா இப்புடி சொல்லிட்ட..! எங்க போனாலும் இது மாரி வருமா..? சொம்மா கெனவு காணாம, போய்ப் பொளப்ப பாரு. கொஞ்சம் உசாராவும் இருந்துக்க. அப்பால பாக்கலாம். வர்ட்டா.."


கபாலி செவுத்துல சாஞ்சிகினு யோசிச்சுகினு இருந்தான்.

"டம்ம்ம்ம்........."

எதுவோ மண்ட மேல வுழுந்த மாரி இருந்துச்சு. அலறி அட்ச்சிகினு ஓடப் பாட்த்தான் கபாலி. அங்கயும், இங்கயும் போய் மோதிகினான். செவுத்துல எல்லாம் போய் இடிச்சுகினான். கண்ணெல்லம் இருட்டிகினு வந்துச்சு. மூளஎல்லாம் கலங்கின மாதிரி இருந்துச்சு. தொம்னு மறுபடியும் எது மேலயோ போய் வுளுந்தான். படர்னு சாஞ்சான். யாரோ அவன் வாலப் புடிச்சு தூக்கற மாதிரி இருந்துச்சு. அப்பால அவனுக்கு ஒண்ணும் பிரியல. கபாலி செத்துப் போனான்.


"நைனா..! ஒடியாந்து பாரு..! நைட்டு ஃபுல்லா கீச்ச்கீச்சுனு கத்திகினு இருந்த எலி ஒண்ண கொன்னுட்டேன்..."


அப்பால கஜா அதப் பாத்து ஷாக் ஆகிட்டான்.

செத்துப்போன கபாலி :



ஷாக்கான கஜா :

No comments: