Saturday, January 19, 2008

2007 - ல் எழுதியதில் பிடித்தது.

ர்வேசன் ஒரு தொடர் விளையாட்டு துவங்கி இருக்கார். பதிவர்கள் கடந்த ஆங்கில ஆண்டு 2007-ல் தாம் பதித்த பதிவுகளில் தமக்குப் பிடித்த பதிவு என்று ஏதேனும் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று விளம்பியிருக்கிறார்.

நிறங்கள் வேறெனினும் தமது குட்டி என்றின்றி போகுமா என்று மகாகவி கேட்டிருப்பது போல், தமது படைப்புகளில் தமக்கு மிகப் பிடித்தது என்று எது எனும் கேள்விக்கு தாய் என்ன பதில் கூற முடியும்? 'காக்கைக்கும்...' தானே!

எனினும் இப்போது மறுபடியும் அனைத்துப் பதிவுகளையும் மீண்டும் எடுத்துப் படித்துப் பார்க்கையில், மிகவும் பிடித்துப் போயிருந்தது, இது தான்.

இவனை இவளால்..!

தலைப்பு , புகைப்படம், நடை, ஆரம்பித்து முடித்த விதம் என்று அனைத்து அம்சங்களிலும் எனக்குப் பிடித்துப் போன ஒன்றாக இருக்கிறது.

இப்பதிவில் ஒரு சிறப்பு உள்ளது.

முன்னொரு காலத்தில் எழுதிய கவிக் கட்டுரைகள் இரண்டை இணைத்து எழுதியதோடு, இரண்டையும் மிக்ஸ் செய்து, பதிவிட்டுக் கொண்டிருக்கையில், அப்போது தோன்றிய புதிய கருத்து(?)களையும் இணைத்து எழுதியது.

லிஸ்ட்.

அழைப்பு.

No comments: