Saturday, January 19, 2008

விளக்கு - ஒரு விளக்கம்.



ந்து விளக்குகளில் ஓர் அர்த்தம் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.

விளக்குகள் எப்படி பணியாற்றுகின்றன?

ஒரு சிறு குழிவான பாத்திரம். அது தான் விளக்கு. அதனுள் எண்ணெய் அல்லது நெய் ஊற்றப்படுகின்றது. பஞ்சு அல்லது நூலினால் திரிக்கப்பட்ட திரியானது அதனுள் இடப்படுகின்றது. ஒரு முனை வெளியே மேல் நோக்கி நீட்டப்படுகின்றது. திரியில் நெருப்பு ஏற்றப்படுகின்றது. விளக்கில் இடப்பட்டிருக்கும் நெய்யோ, எண்ணெயோ திரி வழியாக மேலேறி நெருப்பு எரியத் துணையாய் இருக்கின்றது. எண்ணெய் தீரத்தீர விளக்கு எரிந்து , எண்ணெய் தீர்ந்தவுடன் விளக்கும் அணைந்து போகின்றது.



மனித உடலும் இந்த விளக்கைப் போல் தான் உள்ளது.

உடலின் கீழ் இருக்கும் ஆற்றலானது எண்ணெய் போன்றது. அது தலையில் இருக்கும் வரையில் தான் நமது ஐந்து புலன்களும் செம்மையாகப் பணியாற்றுகின்றன. எண்ணெய் தீரத் தீர எரிகின்ற ஆற்றல் குறைந்து அதனால் ஐம்புலன்களும் தமது ஆற்றலை இழக்கத் தொடங்குகின்றன. எவ்வாறு எண்ணெயைத் திரியின் நுனிக்குக் கொணர்வது? அதற்குத் தான் முதுகெலும்பு எனும் திரி உதவுகின்றது. அதன் மூலமாக எண்ணெய் வேறெந்த வழியிலும் வீணாகாமல், திரியின் நுனிக்கு ஏற்றிக் கொண்டு வர திரி சுடர் விட்டு பிரகாசிப்பது போல், நமது ஐம்புலன்களும் திறம்பட பணியாற்றுகின்றன.

விளக்கு : மனித உடல்.

எண்ணெய் : உடலின் கீழ் உள்ள ஆற்றல்.

திரி : முதுகெலும்பு.

திரியின் நுனி : தலை, முகம்.

என்னே, நமது முன்னோர்களின் சிந்தனை...!

No comments: