Monday, August 03, 2009

மொக்ஸ் - 03.aug.2K9

பிடித்த நான்கு கவிதைகளைச் சொல்லிப் பார்க்கிறேன்.



வெண்பா பயிற்சிப் பதிவில் எழுதிய சில வெண்பாக்கள்.

ஈயூர இல்லை இடம் ::

புசுபுசு பூனை புதிதான கோழிச்
சிசுவைத் தடவிச் செவியில் - கிசுகிசுப்பாய்
"நீயும்நா னும்நட்பா லொன்றிட்டால் நம்மிடை
ஈயூர இல்லை இடம்!"

நெருப்பில் விழுந்த நிலவு ::

விரலைத் தொடுகையில் கைநுனியில் வேர்க்கக்
குரலைத் துழாவநா கோர்த்து - "வரலை..!"
மறுத்துக்கொண் டேதுடித்து மாரிட்சா யும்பெண்,
நெருப்பில் விழுந்த நிலவு.

நிலவில் பிறந்த நெருப்பு ::

சந்த்ரயனில் முன்சாமி சல்லென்று போனார்.மின்
எந்திரங்கள் பார்த்துக்கொள் ளெந்த பயமுமின்றி
வந்துசேர்ந்தார் முன்சாமி. வாழ்த்தி நிலாராசா.
"இந்தியா வில்லெல்லோ ரும்நலமா?" கேட்க

"குஜாலாத்தான் கீறாங்கோ. குப்பையெதும் இல்ல.
உஜாலாவுட்(டு) சுத்தஞ்செஞ் சாப்ல பளிச்னு
மஜாவா இருக்காங்கோ. குப்பையள்ற காண்ட்ராக்ட
ராஜா எடுத்தீங்க. என்னெதுக்கு கூப்ட்டீங்(க)?"

"பலகாலம் சூரியன் வெண்ணொளி தந்தான்.
சிலநாளாய்ச் சொந்தமாய்ச் செவ்வொளிக்கு ஆசை."
"கலங்காத!" தீப்பெட்டி தேய்க்க அதுதான்
நிலவில் பிறந்த நெருப்பு.



குறும்படக் கருத்திற்காக எழுதியது ::

ஆடை அவரவர் ஆசை. அதற்காக
மேடையில் மென்னடை போடுகின்ற - பேடையின்
போதையுடை யும்வேண்டாம். எவ்வுடையி லும்வாழ்வுப்
பாதையில் நல்லதாய் நட.

இலவச இணைப்பாக சமீப கதிரவ கிரகணம் பற்றி ::

சூலைத்திங் கள்நான்காம் வாரபுதன் இவ்வாண்டு
காலை. கிழக்கினில் வானத்து - ஆளைப்
பொறுப்பைத் தொடங்கத் தடுத்ததார் என்றால்
நெருப்பை மறைத்த நிலவு.

1 comment:

*இயற்கை ராஜி* said...

குறும்படம் அருமை..