Thursday, September 07, 2006

படையப்பரும், சில சந்தேகங்களும்..!

நேத்து 1015-வது தடவையா, தலைவரோட படையப்பா , லோகல் கேபிள் அலைவரிசையில் போட்டாங்க.. எல்லா வேலையும் ஸ்டாப் செஞ்சிட்டு, ( என்ன பெரிய வேலை, தூங்கறது தான்) ரூம் மேட்ஸ் 3 பேரும் உட்கார்ந்து பார்க்க ஆரம்பிச்சோம்... படம் கடைசியைப் பார்க்கும் போது, வழக்கமா வர்ற சந்தேகம் வந்து பேச ஆரம்பிச்சோம்... நீங்களும் கொஞ்சம் படித்துப் பாருங்க...

1: செளந்தர்யா சிகப்பு (சிகப்பா, சிவப்பா) சேலை கட்டியப்போ முட்ட வந்த மாடும், ரம்யா சிகப்பு சேலை கட்டியப்போ முட்ட வந்த மாடும் ஒரே மாடா..? இல்ல வேற வேறயா?

2: ஒரே மாடா இருக்க சான்ஸ் இல்ல. ஏன்னா, மாட்டோட ஆயுள் 10 வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும், 18 வருஷத்துக்கு முந்தியே, அது 'கட்டிளங் காளையா' இருந்தது. இப்பொ அதுக்கு கண்ணெல்லாம் காலியாகி இருக்கணுமே?

3: வேற மாடா இருந்தா, எல்லா மாடுமா சிகப்பு சேலையப் பார்த்தா, மிரளும்?

1:இன்னொண்ணு கவனி. செளந்தர்யாக்கு கொடுத்த அதே சிகப்பு சேலை மாதிரி தான், ரம்யாவும் கட்டிருக்காங்க. அவங்களுக்கு குடுத்த சேலை, எப்படி இவங்ககிட்ட வந்தது?

3: அப்படியே வந்திருந்தாலும்,அது சிகப்பா இருக்க சான்ஸ் இல்ல. ஏன்னா தலைவர் தான், மாடு முட்ட வந்தப்போ, மஞ்சள் தண்ணியை சேலை மேல ஊத்திட்டாரில்ல?

2: ட்ரை வாஷ் பன்னியிருப்பாங்க டா.

1: இல்ல. ஒருவேளை, ஆடித்தள்ளுபடிக்கு அந்தப் புடவை எடுத்திருப்பாங்க. 'ஒண்ணு வங்கினா ஒண்ணு இலவசம்'னு ரெண்டு புடவை அதே சிகப்பு கலர்ல, எடுத்திருப்பாங்க. அதில ஒரு புடவை, செளந்தர்யாவுக்கு குடுத்திருப்பாங்க, இன்னொண்ணு ரம்யாவே வெச்சிருப்பாங்க.

3: ஏண்டா.. 18 வருஷத்துக்கு, முந்தி எடுத்த அதே சிகப்பு சேலையைவா கிளைமாக்ஸ்ல கட்டிட்டு வருவாங்க..?

2: ஆமாண்டா.. ஏன்னா அவங்க தான் 18 வருஷமா அவங்க ரூமை விட்டு வெளியவே வரலையே.. அப்புறம் எப்படி வேற துணி எடுத்திருப்பாங்க...?

இந்த ரேஞ்சிலயே, மொக்கை போயிட்டு இருந்திச்சுங்க... தாங்க முடியாம நாங்களே, டி.வி.யை அணைச்சிட்டு போய்த் தூங்க ஆரம்பிச்சிட்டோம்.

No comments: