Thursday, September 07, 2006

மம்மி..மம்மி..


"ம்மா..அம்மா.."

"என்னம்மா..?"

"அந்த Gangarooவால மட்டும் எப்படிம்மா, அதோட குட்டியை லிப்ட் பண்ணி, அதோட bagல வெச்சு அது கூடயே தூக்கிட்டு போக முடியுது..?"

"God அப்படி வெச்சிருக்காரும்மா..!"

"ஏம்மா, God நமக்கு மட்டும் அந்த மாதிரி bag தரலை.."

" நமக்கு அது மாதிரி life இல்லம்மா. அதனால தான் நமக்கு அந்த மாதிரி bag இல்ல.."

"அந்த குட்டி, அம்மா எடுத்துக்கிற முன்னாடி அம்மாகிட்ட என்னம்மா கேட்கும்..?"

"மம்மி, மம்மி.. 'கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா' மம்மினு தான் கேட்டிருக்கும்..."

"மம்மி, மம்மி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா...?"

"அடி மானே..."

"ம்மி, ப்ராமிஸா அந்த மான்குட்டி, அம்மா மான்கிட்ட இப்படி தான் பேசியிருக்குமா..?"

"ஆமா... கண்ணம்மா..."

" நீ எப்படிம்மா, அந்த அம்மா மான் பேசினது எல்லாம், அண்டர்ஸ்டேண்ட் பண்ணின...?"

"குட்டிம்மா.. ஒரு அம்மா நினைக்கிறது, பேசறது எல்லாம் இன்னொரு அம்மாக்கு நல்லா புரியும்மா...ஒ.கே... ஜூ க்ளோஸ் பண்ற டைம் ஆச்சு.. கிளம்பலாம் வா.. நாளைக்கு நாம ஜூக்கு வந்து அம்மா மயில், குட்டி மயில்கிட்ட என்ன பேசுதுனு சொல்லுவனாம்.."

"மம்மி.."

"என்னம்மா..?"

"மம்மி, மம்மி.. கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா...?"

"என் கண்ணு.. வா அம்மா உன்னைத் தூக்கிக்கிறேன்..."

அம்மா என்னைத் தோளில் தூக்கிக் கொண்டார்.

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

1 comment:

பழூர் கார்த்தி said...

விலங்குகளின் மனதை ஓர் தாயின் மூலம்.. நல்ல முயற்சி, வாழ்த்துக்கள் !!

***

ஓர் உரையாடலாகவே முடிந்து விடுவது சிறு பலவீனம்.

***


போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்
!!