Thursday, September 07, 2006

காக்க காக்க = வேட்டையாடு விளையாடு Part 2 ?















நம்ம வலை நண்பர்கள் நிறைய பேரு வந்து, 'வே.வி' பத்தி நிறைய விமர்சனம் பண்ணியிருக்காங்க. நாம அந்த அளவுக்குத் தெரியாதுனாலும், வேற ஒண்ணு தோணுதுங்க.

ஆங்கிலப் படம் எல்லாம் பார்த்தீங்கன்னா, முதல்ல முதல் பார்ட் வரும், அப்புறம் செகண்ட் பார்ட் வரும். படம் அப்படியும் ஓடுதுனா மூணாவது, நாலாவதுனு எல்லாம் போவாங்க. உதாரணத்துக்கு, நம்ம Harry Potter படங்கள் எல்லாம்.

நம்ம கெளதம், ரொம்ப வித்தியாசம பண்ணியிருக்காருனு தோணுதுங்க. முதல்ல காக்க காக்க எடுத்திட்டு, அப்புறம் அதோட முதல் பாகமான வேட்டையாடு விளையாடு எடுத்திருக்காருனு தோணுதுங்க. ஏன் அப்படி?

1. வே.வி-ல ஜோதிகாவோட முதல் திருமணத்துல பிறக்கிற குழந்தை பேரு மயா. கா.கா-ல வர்ற நாயகி ஜோதிகா பேரும் மாயா. அந்த ஜோதிகா பொண்ணு இந்த ஜோதிகா -வா ஏன் இருக்கக் கூடாது?

2. வே.வி ஜோ யு.எஸ் ல இருந்து சென்னை வந்து, கமலோட வாழ ஆரம்பிக்கறாங்க. கா.கா. ஜோ சென்னைல தான் டீச்சர் வேலை பார்க்கிறாங்க.

3.வே.வி வில்லன் இளமாறன் மகனை (குருதிப் புனல்?) , போலிஸ் வேலையிலயே கமல் சேர்த்தி விடறார். அவர் தான் கா.கா -ல சூர்யா டீம்ல இருக்கார். ஆனாலும், மாயா ஜோவைப் பழி வாங்கிற 'உள் மன எண்ணத்தில்' தான் கா.கா. வில்லன் பாண்டியாகிட்ட, சூர்யாவைக் காட்டிக் கொடுத்திடறார்.

ஒரு பாயிண்ட் தான் இடிக்குதுங்க.

1. கா.கா-ல ஜோ சொல்ற 'பாண்டிச்சேரி அக்கா' கமல்-ஜோ -க்கு பிறந்த குழந்தையா இருக்கணும். ஏன்னா வே.வி. ஜோக்கு மாயாக்கு முன்னாடி குழந்தையில்லை. கமல் குழந்தையாகவும் இருக்க சான்ஸ் இல்ல. என்னா 5 மாசக் கர்ப்பத்துலயே கமல் முதல் மனைவி இறந்திடறாங்க.

ஆராய்ச்சி தொடரும்.

No comments: