Sunday, April 29, 2007

வேறென்ன?



ருப்பதாகக் காட்டிக் கொள்ளும் இயக்கங்களில்
இருப்பதென்ன, இழப்பதென்ன?

ஒருவரும் அறியாத உள்மன இருளில்
ஒளிந்ததென்ன, ஒளித்ததென்ன?

விருப்போடு விளையாடிக் கழிக்கின்ற வாழ்வில்
விளைந்ததென்ன, விலகியதென்ன?

உருமாறிக் கூத்தாடும் பொழுதுகளில்
உறுத்துவதென்ன, உள்வாங்கியதென்ன?

தொலைதூரம் ஓடிவந்து தேடுகின்ற நேரங்களில்
தொலைந்ததென்ன, தொலைத்ததென்ன?

சூடான மணல் ஒதுங்க, சுட்டெரிக்கும் நிழலில் பதுங்க,
சுட்டதென்ன, விட்டதென்ன?

ஊர் வந்து உலையிலிட்டு, உதறிவிட்டுப் போன பின்பு,
உனக்கென்ன, எனக்கென்ன?

ஏதோ ஒரு புகையாகி ஏகாந்தம் ஏகிய பின்,
ஏற்றிவந்த ஓடமென்ன,
எடுத்தெறிந்த வேடமென்ன?



No comments: