Sunday, May 06, 2007

கேள்விகளால்...!

ண்பர் பாலமுரளி அவர்கள் தனது பதிவில், சின்னதாய், ரொம்பச் சின்னதாய் ஒரு அழைப்பு விடுத்திருந்தார். ' நாங்களும் இருக்கோம்ல ' என்று கோதாவில் குதித்ததில் கிடைத்த கவிதையை அவரது அனுமதியோடு இங்கே:

படம் :



படைப்பு :

மேக நுனிகளை
நனைத்துப் பெய்யும்
வெயிலின்
சூடு பரவுகின்ற நீரின் மேல்
கிடந்திருக்கும்
நின் மென்னுடலின்
விரல் தீண்டும் வெண் புறாவைப்
போல்
என் மனம் உனை நாடி வந்தது
என்று நான் கூறுகையில்,

மறுத்து,

நுரைத்து நுரைத்து
பாய்ந்து வந்து,
அரித்து, அரித்துக்
கரையைத் தன்னுள்
கரைத்துக் கரைத்துச்
செல்லும் அலை போலவும்,

மலையைச் சூழ்ந்த
நீர்க்கடலா,
கடலில் முளைத்த
நீள்மலையா
என்றுணரா நிலை போலவும்,
உள்ளதென்று நீ சொன்னதை

திருத்தி,

நாணத்தால் சரிந்த
வனமா,
நாரைகள் பறக்கும்
வானமா
என்று நான் கேட்ட,
கேள்விகளால்
நிரம்பி வழிகின்றது
நம் காதல்.

நன்றி பாலமுரளி ஸார்..!

1 comment:

Balamurali said...

அன்பு வசந்த் கவிதை அருமை!