Tuesday, May 15, 2007

மழை இல் வெட்கம்.


ன் வெட்கத்தை இந்த மழையிலேயே கழுவி விட்டு வா! அது எத்தனை சிகப்பு என்று அறியட்டும் இந்த மழை!

உன் புன்னகையை சற்று சிந்தி விட்டு வா! கள்ளினும் பெரும் போதையில் கலங்கட்டும் இந்தக் காற்று!

உன் கோபத்தைக் கொஞ்சம் காட்டி விட்டு வா! கோபமும் இத்தனை அழகா என்று குழம்பட்டும் இந்த வெயில்!

உன் பார்வையை ஆங்காங்கே பதித்து விட்டு வா! விளைந்து நிற்பதெல்லாம் உன் மேல் கொண்ட ஆசைகள் என்று விளங்கட்டும் இப் பெரு நிலம்!

உன் கூந்தலை துளி உதறி விட்டு வா! தெறிப்பது துளியல்ல, கரும் இருட்டின் நிழல் என்று உணரட்டும், பின் மாலை!

உன் நிழல் கூட இன்றி, நீ மட்டும் வா! எத்தனை ஆழம் நம் காதல் என்று தெளியட்டும், முடிவிலா இந்த இரவு..!

9 comments:

Anonymous said...

Mazhayil Vetkam & Thuli, irandumeyy nalla iruku...irandu padangalum kalakal...:)

Aish ungaluku rompa pidikumaa?

ungaluku virupam irundha solunga...i will give u the link for our group...if u have time u can post ur works there too...

இரா. வசந்த குமார். said...

அம்மணி.. நீங்க வந்தது நெம்ப சந்தோசமுங்க..

ஒரு சின்ன திருத்தமுங்க.. அது 'மழையில் வெட்கம்' இல்லைங்க.. 'மழை இல் வெட்கம்'... அர்த்தத்தை மாத்திப்புட்டீங்களே..

ஏனுங்க, ஐஸ் பேபிய புடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களாங்க...

எனக்கும் விருப்பம் தாங்க..உங்க குழுவோட சுட்டி குடுங்க.. அங்கயும் எழுத முயற்சி பண்றேனுங்க...

Anonymous said...

'அம்மணி'யா??..கவுத்திடீங்களே..:))

'மழை இல் வெட்கம்'ஆ?..நீங்க தப்பா எழுதியிருக்கீங்கனு நெனைச்சு நான் திருத்தி எழுதினேன்... :))

இருங்க சுட்டி எடுத்துட்டு வரேன்..ஆனா அதுல ஒரு சின்ன ப்ராப்ளம் இருக்கு..

இரா. வசந்த குமார். said...

ஆஹா.. நீங்க அம்மணி இல்லீங்களா.. சரி விடுடா... விடுடா... ;-(

என்ன பிராப்ளம்.. சொல்லுங்க ப்ராப்ளத்தை பெருசாக்கிடுவோம்..

Anonymous said...

engalodathu penghal matumey irukum kuzhu...adhuvum elaarukum vayadhu 50-90 irukum...paravailaiyaa?? :)

இரா. வசந்த குமார். said...

ஓ.. எல்லோரும் பேரிளம் பெண்களா.. அப்ப உங்களை 'அம்மா'னே அழைக்கலாம்... பெண்கள் மட்டும் இருக்கும் குழு என்றால் நான் வரவில்லை..அது உங்களது தனித்துவத்திற்கு (privacy?) இடையூறு போல் அமையலாம் அம்மா....

Anonymous said...

Ammava??..:)))

mikka nanri...edhukum naan koduthu iruka link paarunga ok?...pidichirundha join panunga..mm?

http://groups.google.com/group/anbudan

Anonymous said...

ungaluku sariyaana link koduthenaa theriyala...so idho:

please dont publish this...:)

http://groups.google.com/group/anbudan

இரா. வசந்த குமார். said...

அட.. நம்ம அன்புடன் குழுவாங்க.. அங்கேயும் எழுதுவோங்க.. நன்றிங்க மல்லிகை...