Tuesday, September 05, 2006

இன்னா சார்?

இன்னா சார்? எப்டி இருக்க? கண்டுக்காம போற பாத்தியா? நாந்தான் சார், பெருமாளு? இன்னா, மறந்துட்டியா..? அல்லாரும் இப்டி தான் சார் இருக்காங்கோ. மனோகர் சார் கூட இப்டி தான். மொதல்ல பாக்க சொல்ல கண்டுக்காம போனாரு. வுட்ருவனா? கபால்னு புட்ச்சு பேசுனேன் சார்.

போன தபா, ஒரு வேலயா அடயாராண்ட போயிருந்தேனா, அங்க புட்ச்சேன் மனோகர் சார. இன்னா வூடுன்றெ நீ? சும்மா சோக்கா இருந்ச்சு சார். ஒரு காருல கெளம்பிக்கினு இருந்தாரு. காரு, நம்ம மைலாப்பூரு தேரு கணக்கா இருக்கு. உள்ள ஒரு குஜிலி வேற. செம குஜால்ஸ் தான்.

அப்டியே காரு முன்னாடி நின்னு, கூப்புடறேன் சார், மனோகர் சாருனு, கண்டுக்கவேயில்ல. சும்மா வுட்ருவனா? அப்பால வாத்தியார் கணக்கா பாஞ்சு போயி பேசினேனு வெய்யி.

எத்தினி தபா நம்ம கூட வந்திருப்பாரு. "பெருமாளு, பெருமாளு"னு எத்தினி தபா கூப்டுவாரு. அதெல்லாம் பளய ஸ்டோரியா ஆயிடிச்சு சார்.

எத்தினி பேர மேலயும், கீளயும் கூட்டிகினு போயிருக்கேன் தெரியுமா சார், உனக்கு? எவ்ளோ ஜபர்தஸ்தா இருந்தேன் தெரியுமா சார்? அல்லாரும் நின்னுகினு தான் வருவாங்கோ. நா மட்டுந் தான் சும்மா ராசா கணக்கா ஜம்முனு ஒக்காண்டு வருவேன்.

அப்பல்லாம் நான் போய் கை வெக்காட்டி, எவனும் லிப்டுல ஏற முடியாது , ஆமா.

ஒரு தபா என்ன நடந்துச்சு, நெனவு இருக்கா சார், உனக்கு. அட, பேப்பருல அல்லாம் வந்துச்சே.

கவர்னரு வந்து பத்தாவது மாடியில, ஏதொ ஆபீசு தொறக்கணுமாம். நெறிய ஆபீசு தெறந்துகினே இருந்தாங்கோ, அந்த பீரியடுல. அல்லா அபீசும் ஒயுங்கா வொர்க்காயி வேலயெல்லாம் சுளுவா முடிஞ்சுதானு மட்டும் கேட்டுடாத. அது வேற கத.

கவர்னரு வந்து வெயிட் பண்ணிகினு கீறாரு. அல்லாரும் பெருமாளு எங்கனு நம்மளத் தேடிகினுகீறாங்கோ. நமக்கு வூட்ல ஒரு காரியமாய்ப் போயிடுச்சு. அத்த முடிசிகினு வர கொஞ்சம் லேட்டாயிடுச்சு. அப்பால போயி லிப்டுல அல்லாரையும் மேல கூட்டிட்டு போனேனு வெய்யி.அப்பாலிக்கு தனியா ஒரு பாடு அல்லாருகிட்டயும் வாங்குனேன், அது வேற.

"லிப்ட் ஆபரேட்டருக்காக வெயிட் பண்ணிய கவர்னரு"னு பேப்பருல அல்லாம் வந்துச்சு சார். நம்ம வூட்டாண்ட அல்லாரும் நம்மல எப்டி பாத்தானுங்கங்கிற? சொம்மா ராசா மாரி.

அல்லாம் பளய ஸ்டோரி சார்.

இப்பெல்லாம் போற, வர்றவங்களே லிப்ட் ஆபரேட் பண்றாங்களாம். உனக்கு வேல இல்லனு தொரத்திட்டாங்க சார்.

போக வர்றச் சொல்ல, எதுனா பிராபளம், ரிப்பேரு ஆகிடுச்சுனு வெய்யி. அவுங்க இன்னா பண்ணுவாங்கோ? இல்ல, இன்னா தெரியும் அவுங்களுக்குனு கேக்குறேன்? எனிக்குத் தெரியும் சார். எங்க ஒயரு போகுது, எங்க மெயின் இருக்குனு எனிக்கி மட்டும் தான் சார், தெரியும். நீயும் இப்பல்லாம் அப்டிதான் போய்க்கினும், வந்திகினும் இருப்பனு நெனிக்கிறேன். கொஞ்சம் உசாரா இருந்துக்கோ.

அத்த வுடு சார்.

பெசன்ட் நகராண்ட, நமக்கு கொஞ்சம் வேல இருக்கு. கொஞ்சம் லிப்ட் குடுக்கிறயா சார்?

இன்னாடா நமக்கு லிப்டு குடுத்துகினு மேலயும், கீளயும் கூட்டிகினு போய்க்கினு இருந்தவன், நம்மகிட்டயே லிப்டு கேக்குறான்னு நெனக்காத.
"நம்ம பெருமாளு"னு நெனச்சுகினு லிப்டு குடு சார். மனோகர் சார் மாரி மறந்துடாத, என்ன?

வண்டியில ஏறிக்கவா, சார்?

(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)

3 comments:

Anonymous said...

nice story... used chennai slang good...

பழூர் கார்த்தி said...

இன்னாபா, இம்மா ஷோக்கா எழுதிகீறியே நீயு...லிப்டாண்ட உக்காந்துகினு வொன் இஷ்டத்க்கு எழுதிகினே பூடுவீயே நீயு.. பேஜாராயிடும்பா. வொழுங்கா எனிக்கு நன்றி சொல்லல :-)))

***

நல்லா இருக்குங்க, வாழ்த்துக்கள் !!

***

முரட்டுக்காளை said...

நல்லா கருத்து சொல்லீக்கிரே நைனா. நாமளும் இத்த பத்திதா எளுதிக்கிணோம். அப்பால வந்து பாரு...