Friday, April 27, 2007

யார் சொல்வது?


ந்தக் கேணியில் ஊறிய நீர் என உனைச் சொல்வது?
எந்தச் செடியில் பூத்த பூ என உனைச் சொல்வது?
பூமியின் எந்தச் சுற்றில் பிறந்தாய் என யார் சொல்வது?

மேகப்பூ தெளிக்கும் மழைத்தேன் என உன் வார்த்தைகளை யார் சொல்வது?

உறைய வெட்டிய வாசப் பன்னீர்த் துளிகளென உன் ஸ்பரிசங்களை யார் சொல்வது?

சிரித்து பேசிய பொழுதுகளில் வரித்துக் கொண்ட அர்த்தங்களை யார் சொல்வது?

கூர்வாள் நுனிகள் உன் கண்களில் வந்தது என்று என்று யார் சொல்வது?

பின்பொரு நாள், விஷப் பூச்சு படர்ந்த வார்த்தைகளை நீ தெளிக்கையில் நான் இறந்து போனேன் என்பதை உனக்கு யார் சொல்வது?

No comments: