Friday, November 28, 2008

உனக்கான ஒரு பெயர்.

24.Nov.2005.

னக்கான ஒரு பெயர் என்று எதைக் கூறுவாய்?

'என் கண்ணின் மணி' என்று கொஞ்சிய தாயின் அன்பையா?

'என் ரோஜாக் குட்டி' என அள்ளிய தந்தையின் கனிவையா?

'பப்ளிமாஸ்' எனக் கேலிய அண்ணனின் வார்த்தையா?

'என் செல்லக் குட்டி' எனக் கிள்ளிய தாத்தா, பாட்டியின் பாசமா?

'ஏய் குட்ட வாத்து' எனக் கூறிய பள்ளித் தோழியின் நேசமா?

'முதல் மாணவி' எனப் பெருமைப்பட்ட பள்ளி ஆசிரியர்களின் பெருமிதமா?

'நல்ல தோழி' எனப் புகழ்ந்த கல்லூரி நண்பனின் நட்பா?

இவை எதுவும் இல்லை..!

வால் போல் ஒட்டிக் கொண்டு வரும் கணவன் பெயரோடு இணைந்தே வரும், உன் பெயர் தான் என்று சொல்லி விடாதே..!

தாங்கிக் கொள்ளத் தடுமாறும், இந்தப் பாழ் மனது..!

No comments: