Monday, August 21, 2006

சில கவிதைகள்...!

எங்க அப்பா வந்து நல்லா கவிதை எழுதுவாருங்க..! அவரோட genes நமக்குள்ள ஓடுதுங்களா, அதனால, அப்பப்போ நாமளும் கொஞ்சம் முயற்சி பண்றதுங்க. அதுல பாருங்க, ஏழாப்பு படிக்கும் போது, வானம், நிலா, பூமி, மழை, மரம்னு கொஞ்சம் கோர்த்து விட்டு, எங்க தமிழ் அய்யாகிட்ட போய் காட்டினேங்க.

அவரு ரொம்ப நல்லவருங்க. மேலாவ பார்த்திட்டு, 'கவிதைன்னா இப்படி இருக்கக் கூடாது, கொழந்தை'னு சொல்லி, அணி, யாப்பு, வெண்பா, ஆசிரியப்பானு குடுத்தாருங்க பாருங்க, ஒரு lecture. ஓடினேன், ஓடினேன் கவிதையுலகின் எல்லை வரை ஓடிட்டேங்க.

இருந்தாலும் எல்லை தாண்டி வந்து வம்பு பண்றவங்க மாதிரி, நாமளும் அப்பப்போ கவிதையுலகத்தோட மணல்ல, கொஞ்சம் கிறுக்கிட்டு ஓடி வந்திடறதுங்க.
அதுல நெறைய சொத்தைங்க இருந்தாலும், சிலதெல்லாம் நல்லாவே வந்திடுங்க. அப்போ கொஞ்சம் கர்வம் தலைக்கேறினாலும், ஒரு விஷயம் நினைவுக்கு வந்திடுதுங்க..

நம்ம குடியரசுத் தலைவர் கலாம் ஐயா அவங்க வந்து, சின்ன புள்ளையா இருக்கும் போது, இராமேஸ்வரத்தில படிச்சு முடிச்சிட்டு, மேற்படிப்புக்காக இராமனாதபுரம் போகணுங்களாம். அவங்க அம்மாவால குழந்தையை பிரிஞ்சிருக்கணுமேனு கவலையாகி, அழ ஆரம்பிச்சிட்டாங்களாம். அப்போ கலாம் ஐயாவோட அப்பா சொன்னாராம்.
'அம்மணி, கலாம் நம்ம மூலமா பூமிக்கு வரணும்னு கடவுள் விரும்பியிருக்கார். நாம் காரணம் கிடையாது. அது போல் கலாமோட உடலுக்கு மட்டும் தான், இந்த இராமேஸ்வரம் இடம் தந்திருக்கிறது. ஆன்மாவிற்கு அல்ல. ஆன்மாவிற்கு கட்டுப்பாடுகள் கிடையாது.' அப்படின்னாராம்.

அது போல, இந்த கவிதை நம்ம மூலமா வரணும்னு இருக்கு. நாம் வெறும் கருவி மட்டும் தான். அதனால கர்வம் வர்ற அவசியமில்லைனு தோணுங்க.

கீழ இருக்கிற சில கவிதைகளை (அப்படினு நான் நினைச்சிட்டு இருக்கிறதை..) படிச்சிட்டு ரொம்ப டென்ஷன் ஆகிறவங்க, இதுக்கு இவ்ளோ மேல் கட்டுமானமா (Build Up)னு கடுப்பாகிறாவங்க, நல்லா அடிச்சிடுங்க...என்னையில்லை, பின்னூட்டத்தில.

காத்திருக்கும் இதயம்.
எந்த அறையில்
வந்து
வசிக்கப் போகிறாய்?
நான்கு
அறைகளுடன்
காத்திருக்கிறது
என் இதயம்.

EggStraw.
பேசாத ஒரு மெளனத்தால்
என்னை உறிஞ்சும்
உன் இதழ்கள்
ஒரு Straw.
போதும் போதாதற்கு
உருட்டி விளையாடும்
Egg போன்ற கண்கள்
உனக்கெதற்கடி EggStraw.

(இதெல்லாம் உருப்பிடற கேஸானு நீங்க நினைக்கிறது புரியுதுங்க...அதெப்படிங்க, எல்லாரும் ஒரே மாதிரி நினைக்கிறீங்கனு தாங்க புரிய மாட்டேங்குதுங்க....)

சரி, அப்ப வரட்டுங்களா...

2 comments:

Anonymous said...

poda mokkai

இரா. வசந்த குமார். said...

Dear Anony...

Very Thanks for your comment.