Friday, August 25, 2006

எதுக்கு சண்டை..?


"அப்பா வந்தாச்சு..அப்பா வந்தாச்சு.."

"பன்னி..ஏன் அதுக்கு இப்படி கத்திக்கிட்டே வர்ற..."

"அப்பா, என்ன வெயில்..என்ன வெயில்.."

"இந்தாங்க...தண்ணி குடிங்க.."

"அப்பா..அப்பா.. நான் சொன்ன ஊதாக் கலர் பாவாடை வாங்கிட்டீங்களா..?"

"பூரணி.. அனுவுக்கு மட்டும் தான் இப்ப வாங்கிட்டு வந்திருக்கேன்...உனக்கு பொங்கலுக்கு வாங்கித் தரேம்மா.."

"போங்கப்பா..."

"எனக்கு மட்டும் துணி...அக்காவுக்கு இல்ல...ஜாலி..வெவ்வெவ்வெ..."

"ஏங்க.. பூரணிக்கும் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல..."

"புரியாம பேசாத...குடுத்த போனஸ்ல அவ்ளோ தான் வாங்க முடிஞ்சது..."

"அப்பா..எனக்கு வாங்கிட்டு, அப்புறம் சின்னதா போனப்புறம், அவளுக்கு குடுக்கலாம்ல..."

"பாவம்மா சின்னப் பொண்ணு..."

"எப்பப் பாத்தாலும் சின்னப் பொண்ணு...சின்னப் பொண்ணு..."

"உனக்கு பர்த்டே ட்ரெஸ் இருக்குள்ள, அதைப் போட்டுக்கயேம்மா..."

"போங்கப்பா..."

***

"அப்பா.. நல்லாருக்கா.."

"சூப்பரா இருக்குடா அனு... பார்த்து பட்டாசு வெடிக்கணும்"

"சரிப்பா.."

"அக்கா.. நல்லாருக்கா.."

"போடி..."

"வெவ்வெவ்வெ.."

"என்னங்க பாவம் பூரணி...பண்டிகையும் அதுவுமா.. முகத்தைப் பாருங்க..."

"என்ன பண்ணச் சொல்ற கமலா..? பூரணி, இங்க வா..இந்த மத்தாப்ப பிடிச்சிட்டு நில்லு..அப்பா உள்ள போய்ட்டு வர்றேன்"

"சரிப்பா.."

"அனு பார்த்து...பார்த்து...அனூஊஊ."

"என்னாச்சு...."

"ஆ..ஆஆஆ.."

"அம்மா...அவ நகந்துட்டே வந்தாளா...அனு பாவாடைல தீ பிடிக்க இருந்துச்சும்மா... நல்ல வேளை நான் போய் அனுவத் தூக்கிட்டு வந்திட்டேன்...அப்பா எவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பாவாடையை வாங்கிருப்பார் இல்லமா..?"

"என் செல்லக் குட்டி..."

இச்...இச்...இச்...

"அக்கா...இந்தா ஜாமூன் சாப்பிடு...."

" நீயும் சாப்பிடு அனு...."

****

No comments: