
பள்ளிக்குப் போகிற வயசில, நமக்கு பல Heroes இருந்தாங்க. TVல பார்த்தீங்கனா, He-Man. அவர் வந்து கத்திய எடுத்து சண்டை போடும் போது, பார்க்கணுமே..அவர் கூட, ஒரு சிங்கம் வரும் பாருங்க, நார்னியா சிங்கம் எல்லாம் அது கிட்ட பிச்சை தான் வாங்கனுங்க.
அப்புறம் அந்த வயசில சிறுவர் மலர் தாங்க பைபிள் மாதிரிங்க. சிறுவர் மலர்னா என்னனு கேக்கறவங்களுக்கு மழை நாளில் ஆறிப்போன இட்லியும், ஊசிப் போன வடையும் கிடைக்கட்டுங்க. பிரதி வாரம் வெள்ளிக் கிழமை , தினமலர் கூட இலவச இணைப்பா வருங்க. நமக்கு அதுல Hero வந்து 'பலமுக மன்னன் ஜோ' தாங்க. வாரவாரம் அவரோட அட்டகாசம் அருமையா இருக்குங்க.
அப்புறம் வந்து எனக்கு அதில ரொம்ப பிடிச்ச தொடர் 'உயிரைத் தேடி' தாங்க. அருமையான தொடர்ங்க. அதில உலகமே அழிஞ்சு போயிடும். Hero ஒரு பையன்ங்க. அவன் வந்து வேற யாராவது உயிரோடு இருக்காங்களானு தேடுதேடுனு தேடுவானுங்க. உங்கள்ல யாருக்காவது நினைவு இருந்தா சொல்லுங்க.
அப்புறம் ஊருக்குப் போகும் போதெல்லாம் 'பூந்தளிர்' தாங்க நமக்குத் துணை. அதுல 'சுப்பாண்டி','கபீஷ்','வேட்டைக்காரன் வேலுத்தம்பி',அப்புறம் ஒரு மந்திரி இருப்பாருங்க, ராஜாவைக் கவுக்க திட்டம் போட்டு, ஒவ்வொரு தடவையும் ஏமாறுவாருங்க, இவங்க எல்லாம் நம்ம நண்பர்களா பயணம் முழுக்க வருவாங்க.
No comments:
Post a Comment