Wednesday, August 23, 2006

மற்றும் சில வரிகள்...!



ஒரு மழை நாளிரவு.

ஒரு
மழை நாளிரவில்
ஒற்றைக் குடைக்குள்
நாம்
நடக்கையில்,
நம்மோடு
நனைந்து கொண்டே
வந்தது
நம் காதல்.

காதல் புதையல்.

நம்
காதல் புதையலைக்
காக்கின்ற
பூதங்களாய்
உனது நாணமும்,
எனது அச்சமும்.

கனம்..!

குச்சிகளால்
குத்தி விளையாடிய
ஓணானின் வலி,

இறுக்கக் கட்டிய
பட்டாசு வாலோடு
கழுதையின் கதறல்,

குறிபார்த்து
விட்டெறிந்த
கல் பட்ட
தெரு நாயின் ஓலம்,

உண்டி வில்லால்
அடிபட்ட
சின்னக்குருவியின்
துடிப்பு,

நினைவுபடுத்துகிறது
நீயென் மனதில்
விட்டுச்சென்ற
காதலின் கனம்.

No comments: