Monday, August 21, 2006

கொஞ்சும் கவிதைகள்.




ஒரு
பூஎழுதிய,
விரலிடுக்குகளில்
வழிகின்ற
வாசத்தில்
வசிக்கின்ற பொழுதுகள்.

*****

எதிர்பார்க்காமல்
உன்னை
எதிரே பார்க்கையில்,
என்ன பேசுவது என்று
இந்த மனதிற்கு
யார்
கற்றுக் கொடுப்பது?
***

சிரிப்பான பொழுதுகளின்
போது படிந்த
உன்னழகின்
இனிப்பான பதிவுகளைத்
தொட்டு
அழிக்கிறது,
மறுப்பின் போது
நான் கண்ட
வெறுப்பு முகத்தின்
ஈரக்கை.

***

No comments: