Monday, August 21, 2006

சின்னச் சின்ன ஆசைகள்.

இப்ப பார்த்தீங்கனா, நம்ம எல்லோர்க்கும் பெரிய, பெரிய ஆசைகள் இருக்குங்க. பெரிய வீடு கட்டணும், நிறைய பணம் இருக்கணும், ஐஸ் மாதிரி Girl Friend/Wife இருக்கணும், குழந்தைங்க சொன்ன பேச்சைக் கேட்டு, திருவிழாவுக்கு போனமா, வந்தமானு இருக்கனும் (இதெல்லாம் பெரிய ஆசையானு நினைச்சிடாதீங்க. திருவிழா, கண்காட்சிக்கு போய்ட்டு, அப்பா கையால அடி வாங்காம,அழாம வர்ற குழந்தைகளை விரல் விடாமலேயே எண்ணிடலாங்க. நாங்க எல்லாம் அந்த காலத்துல அப்படி படுத்தியிருக்கோங்க. சரி, அதை விடுங்க, அந்த வயசு அப்படி.) .

அதே மாதிரி, எல்லர்க்கும் சின்னச்சின்ன ஆசைகளும் இருக்குங்க. நம்ம மதுபாலா அக்காவுக்கு 'வெண்ணிலவைத் தொட்டு முத்தமிடணும்'ங்கிற்து சின்ன ஆசை. ஆனா அது எவ்வளவு மில்லியன் டாலர் ஆசைங்கிறது JFK ஐயாவைத் தான் கேக்கணும்.

நமக்கும் கொஞ்சம் சின்னசின்ன ஆசைகள் இருக்குங்க.

1. நாம பிறந்தது கோயம்புத்தூர்ல KGலங்க. அங்க போய், அம்மாக்கு முன்னாடியே நம்மைத் தொட்டுத் தூக்கின நர்ஸம்மாவைத் தேடிக் கண்டுபிடிச்சு, 'அம்மா, நான் நல்லாயிருக்கேம்மா, நீங்க எப்படி இருக்கீங்க'னு கேக்கனுங்க.

2.குடும்பச் சூழலால் மெட்ரிக்ல இருந்து பிரிஞ்சு போகும் போது, என்னை அங்கேயே இருக்கச் சொல்லி கேட்டுக்கிட்ட Teachers, Princi Madam கிட்ட போய் ' நான் நல்லா தான் இருக்கேன் மேடம்'னு சொல்லனுங்க.

3. சிக்கன் குனியா வந்து, முட்டி வலியோடு இருக்கிற கோழி கால்ல, வைப்ரேட்டர் ஆன் பண்ணின செல் போனைக் கட்டி, அதோட ஆண்ட்டெனால, சாக்பீஸைக் கட்டி , கிறுக்கச் சொன்னா எப்படி கிறுக்குமோ, அப்படி கிறுக்கிட்டு இருந்தப்போ, மூணாப்பு படிக்கும் போது கைமுட்டி, முட்டியா அடிச்சு ஓரளவு திருத்தின Teacher -ஐப் பார்த்து 'இப்ப எல்லாம் நான் கையால் எதுவும் எழுதுறதில்லைங்க Madam. எல்லாம் கீ-போர்டு தான். கையெழுத்தே மறந்து போச்சுங்க Madam'னு சொல்லனுங்க.

அடுத்த சின்ன சின்ன ஆசைங்க அப்புறம் சொல்றேங்க.
பார்க்கலாங்க.

3 comments:

Veera said...

//நம்ம மதுபாலா அக்காவுக்கு 'வெண்ணிலவைத் தொட்டு முத்தமிடணும்'ங்கிற்து சின்ன ஆசை. ஆனா அது எவ்வளவு மில்லியன் டாலர் ஆசைங்கிறது JFK ஐயாவைத் தான் கேக்கணும்.///

ஹா..ஹா.ஹா.. இந்த பொம்பளங்களே இப்படித்தான்!!!

குட்டி குட்டி ஆசைகள் எல்லாம் சூப்பரா இருக்கு.. எதாவது நிறைவேறிச்சா?

இரா. வசந்த குமார். said...

ம்ஹூம்... ஒண்ணு கூட நிறைவேறலைங்க... முயற்சி பண்ணனும்....

thamizhparavai said...

ஆசைகள் நிறைவேற ஆசை...