Thursday, August 24, 2006

"ங்கா...ங்கா.."


"ங்கா...ங்கா.."
"என்னப்பா....பப்பு மம்மம் வேணாமா..?"

"ங்கா...ங்கா.."
"அசம் மம்மம் வேணுமா..?"

"ங்கா...ங்கா.."
"தச்சு மம்மம்..?"

"ங்கா...ங்கா.."
"இப்ப பப்பு மம்மம் சாப்பிடுவியாம். அங்க நிலா தெரியுதில்ல..அம்மா அங்க கூட்டிட்டு போவேனாம்.."

"ங்கா...ங்கா.."
"இந்த ஒரு வாய் மட்டும் சாப்பிடுவியாம்..."

"ங்கா...ங்கா.."
" நல்ல குழந்த இல்ல....இந்த ஒரு வாய் மட்டும்..."

"ங்கா...ங்கா.."
"ஓ.. நிலால இருக்கிற பாட்டிகிட்ட கூட்டிட்டு போகணுமா..?"

"ங்கா...ங்கா.."
"என்ன..? பெரியவனா ஆனப்புறம் நீயே போயிடுவியா..?"

"ங்கா...ங்கா.."
"அம்மாவையும் கூட்டிட்டு போவியா...?"

"ங்கா...ங்கா.."
"இந்த ஒரு வாய் சாப்பிட்டா தான், நானும் வருவேன்.."

"ங்கா...ங்கா.."
" நல்ல பையன்...சொன்னவுடனே சப்பிட்டுட்டியே..."

இச்..இச்..இச்...

"ஏண்டி...? உங்கப்பன் கல்யாணத்துக்கு போடறதா சொன்ன நாலு பவுன் சங்கிலி எப்ப டி போடுவான்..? உங்கப்பன் சோறு தான் சாப்பிடறானா, இல்ல வேற ஏதாவதா..?"

' தம்பிக்கு பீஸ் கட்ட செலவாயிடிச்சுனு அப்பா சொன்னாரே..இந்த மனுஷனுக்கு இதை எப்படி புரிய வெப்பேன்...!'

2 comments:

aaradhana said...

நல்ல பதிவு. நன்றி

இரா. வசந்த குமார். said...

மிக்க நன்றி, ஆராதனா..