Wednesday, March 05, 2008

என்ன செய்யப் போகின்றான்?



சாதம் வைக்காத
மொட்டை மாடிகளால்
நிறைந்த பின்
நகரத்தின்
காகங்கள்
எங்கு சென்று
கரைந்தன?

கம்பிகள் அற்ற
தெருக்களில்
எந்தப் பாதையில்
அமர்கின்றன
சிட்டுக்குருவிகள்?

குப்பைகளால்
கட்டமைந்த பின்,
எந்தப் பச்சைப்புல்லைத்
தின்னும்
பசுக்கள்?

எல்லோரையும்
துரத்தி விட்டு
என்ன செய்யப் போகின்றான்
மனிதன்?

No comments: