Thursday, March 20, 2008

பீச்சாங்கர...!



டல் நீருக்கு வெள்ளை ஆடைகளை அணிய வைத்து, அலைகளாய்க் கொப்பளித்துக் கொண்டிருந்தது. கருணையே இல்லாத கதிரவன் காற்றைப் பொசுக்கிக் கொண்டிருந்தான். காற்றின் கண்ணீர் கானல் நீராய் கசிந்தது.

"இப்ப இன்னாத்துக்கு இங்க இட்டாந்த? அதும் இப்டி ஒரு மொட்ட வெயில்ல..?"

"இன்னாம்மே! கொஞ்ச நேரம் குஜாலா இருக்காலாம்னு சவாரி கூட போகாம இங்க வந்தா..."

"அய்ய! அதுக்காண்டி தான் இஸ்துகினு வந்தியா? வூட்டாண்டயே சொல்லிருக்க வேண்டியது தான..."

"அது எப்டி? புள்ளங்க தான் மூணு மூன்றையானா இஸ்கோலுல இருந்து வூட்டுக்கு ஓடியாந்துருமே..!"

"அதான் மச்சான் இங்க கூட்டிகினு வந்தியா? நானும் பீச்சுக்கு கூட்டினு போனு எத்தினி தபா கூவிகினே இருந்தேன். ஐயாவுக்கு தோணுச்சினா தான் நடக்கும் போல..! அது சரி..! இன்னாய்யா இது பாக்க சின்னஞ்சிறுசுக மாரி இருக்குதுங்க! அந்த போட்டுக்கு அடியில உக்காந்து இன்னா பண்ணுதுங்க..?

"ஆங்..! கோலி வெள்ளாடறாங்கோ? இன்னாடி நீ? ரெண்டு புள்ள பெத்தவ மாரியா கேக்கற..?"

"அதுக்காண்டி..! இன்னாயா அக்கிரமா இருக்கு! பாத்தா படிக்கற புள்ளைங்க மாரி இருக்குதுங்க. இப்டி பட்டப் பகலுல மனுசன் போய்க்கினும் வந்துகினும் இருக்கற பப்ளிக் பிளேஸ்ல இந்தக் கருமாந்திரம் பண்ணிட்டு இருக்குதுங்க! இதுங்க அப்பனாத்தா பாக்க சொல்லோ எப்டி மனசு நொந்து போகும். கஷ்டப்பட்டு வாயக் கட்டி, வயித்தக் கட்டி அவுங்க கஷ்டப்பட்டு ஒயச்சு, காசு சேத்து, புள்ளங்களாவது நல்ல இருக்கணும்னு பெரிய பெருய இஸ்கோலுலயும், அது இன்னாய்யா அது... அக்காங், காலேசு அங்க எல்லாம் சேத்து வுட்டா, இதுங்க பண்ற காரியத்துக்கு எனக்கே செருப்ப கயட்டி நாலு அடி அட்ச்சா இன்னானு தோணுது.."

"அடேங்கப்பா! இன்னா ஒனக்கு இவ்ளோ கோவம் வருது! இதுக்கே இப்டி டென்சன் ஆகறியே, இன்னும் பெசன்ட் நகரு பீச்சுப் பக்கமெல்லாம் பயங்கர கலீஜா இருக்கும். சவாரி போச் சொல்ல கண்ண மூடிக்கினு தான் கிராஸ் பண்ணிப் போவேன். அத எல்லாம் பாத்தா இன்னும் என்ன சொல்லுவியோ?"

"பீச்சுனா பாக்க சொல்ல நல்லாருக்கும். புள்ளங்களையும் கூட்டிகினு வரலாம். செலவு கம்மியா பொயுது போகும்னு நெனச்சா, இந்த எளவையெல்லாம் பாக்க அதுங்கள வேற கூட்டிகினு வரணுமானு தோணுது..!"

"அப்ப பீச்சுக்கு கூட்டிகினு போனு அப்பபோ சவுண்டு விடுவியே, அதெல்லாம் ஒனக்கோசரம் இல்லையா..?"

"அடப்பாவி மனுசா! நீ அப்டியா நெனச்சுக்கினு இருந்த! ஏன்யா! ரெண்டு புள்ள பொறந்தாச்சு. அதுங்க இஸ்கூலுக்கு போற வயசாகிடுச்சு! இன்னமும் நீயும், நானும் மட்டும் பீச்சு, பார்க்குனு சுத்தறதுக்கு நாம் இன்னா நேத்து தான் கலியாணம் பண்ண சோடியா? இனிமே புள்ளைங்க நல்லது தான் நமக்கும்.."

"அது சர்தான்! வாத்தியாரே பாட்டுல சொல்லி இருக்காரே!"

"இன்னானு..?"

" 'இனி புருசனுக்கு கெடியாது கொயந்தைக்கு தான் முத்தம்'னு.."

"கரீட்டு தான்! வாத்தியாரு சொன்னா அது என்னிக்காவது தப்பா போயிருக்கா..? சரி வா! புள்ளைங்க வந்திடப் போகுதுங்க! போய் சோத்த ஆக்கணும்! நீயும் சவாரி போய்ட்டு வா..! வழியுல இந்த மாரி கண்றாவியெல்லாம் பாத்து மனசக் கெடுக்காத. வூட்டுல நான் ஒருத்தி உசுரோட இருக்கேங்கறத மறந்திடாத. இன்னா புரிஞ்சுதா.?"

"சர்தான் புள்ள! வா! வூட்டுக்குப் போலாம். இன்னோரு தபா, இந்த மாரி எல்லாம் நடக்காம பீச்சு சுத்தமா இருக்க சொல்லோ, புள்ளங்களயும் கூட்டிகினு வருவோம். நீ சொன்ன மாரி, இனிமே புள்ளங்க சந்தோசம் தான் நமக்கும்! ஆனா, நம்ம புள்ளங்கள இதுங்க மாரி தறுதலயா வளக்கக் கூடாது. தங்கம் கணக்கா தான் வளக்கோணும். இன்னா, ஒனிக்கு ஹாப்பி தான...?"

" தோடா.. தொர இங்கிலீசு எல்லாம் பேசுது...!"

பொறிந்த வெயிலின் சிதறல்களாய் இருவரும் சிரித்தனர்.

No comments: