Tuesday, March 18, 2008

இது அவசரமாய் எழுதிய ஒரு கவிதை!



நிறுத்து உன் புன்னகை எல்லாம்! கிறுக்கல்கள் அதிகரிக்கின்றன.

வேறெங்காவது செலுத்து உன் பர்வைகளை! பற்றி எரிந்து தீய்ந்து போய் விட்டது இதயம் முழுதும்!

சொற்களை சேர்த்து என் மேல் எறிவதை கொஞ்ச காலமாவது அணை கட்டி வை!
வார்த்தைகளின் கும்பலுக்குள் தொலைந்த போய் இப்போது தான் மேலேறி வருகிறேன்!

தொலைவில் எங்காவது போய் நின்று கொள்! நிழல் கூட என்னைக் கேலி செய்கின்றது!

பறவையாய் பறப்பதைக் கற்றுக் கொள்! நதியலைகள் கொஞ்சம் நகர்ந்து செல்லட்டும்!

கரையிலேயே நிற்கிறாய் நாணலென! காலடியில் சுற்ற வைக்கிறாய் நினது நாணமென...!

No comments: