Tuesday, April 22, 2008

கடைசிப் பக்கங்கள்.

பி.கே.பி. தளத்தில் இருந்து இன்று சுஜாதாவின் கணையாழி கடைசிப் பக்கங்களை இறக்கிப் படித்தேன்.

அனலாக் டிவைசஸ் ஷார்க் ப்ராசஸர் டேட்டா ஷீட்டையும், விஷூவல் ஆடியோவில் கஸ்டம் ஃப்ரேம்வொர்க் இன்டக்ரேஷன் ஷீட்டையும் திறந்து வைத்து, அவற்றின் பின்புலத்தில் படிக்க ஆரம்பித்து, முழுதும் முடிக்க 17:25 ஆனது. ப்ரிண்டருக்கு அருகிலேயே இருக்கை இருப்பதால், அவ்வப்போது ப்ரிண்ட் எடுக்க வருபவர்களுக்காக மற்ற ஷீட்டுகளைப் பார்ப்பது போல் நடித்து, ஜப்பான் கஸ்டமர் கொடுத்த கார் வடிவ சவசவ சாக்லேட்டுகளை மென்று தின்று கொண்டே படித்து முடித்தேன்.

தமிழ், பாவண்ணன், வண்ணதாசன், சாகித்ய அகாடமி, பம்பாய், ஜப்பான், டெல்லி, லெமூரியா, சென்னை, நாட்டுப்புறப் பாடல்கள், தமிழ் சினிமா, கன்னட நாடகங்கள், சத்யஜித் ரே, கமலஹாஸன், திராவிடம், மொழி, குமுதம், கணையாழி, சிறு பத்திரிக்கைகள், எலெக்ட்ரானிக்ஸ், தொல்காப்பியம், ஹைக்கூ, புறநானூறு, தமிழ்ச்சங்கம், ரோபோட், கழிநெடிலடி வெண்பா....

என்ன தான் இல்லை..? அவரது பரந்துபட்ட ஆர்வங்களும், அவற்றை அவர் எழுதி நம்முடன் பேசுவது போல் வழுவிச் செல்லும் பாங்கும்... தொகுப்பை முழுதும் படிக்க வைக்கின்றன என்று சொன்னால், அது அவர் பாணியில்... வாசகனின் ஆதார உற்சாகம்.

குறிப்பாக ஒன்றே ஒன்று..! அக்காலச் ('72) சினிமா பாடல்க்ளைச் சொல்லும் போதும், அரசியலாரைப் புகழ்ந்து கவிஞர்கள் பாடுவதும் பற்றி ஒரு வார்த்தை கூறுகிறார்... 'அவை ராஜவேர்வை..!'.

ராஜவேர்வை - அட்டகாசமான வார்த்தை.

க்ளிக்.

No comments: