Tuesday, January 29, 2008

கறுப்புக் குதிரை.

ன்னும் ஒரு நகர்த்தல் தான்.

தனது ராஜா நாலா திசையிலும் சிறைபடப் போகும் நேரம், இன்னும் சில நொடிகள் தான். அதற்குப் பிறகு எல்லாம் முடிந்து விடும். இவ்வளவு காலம் மனதில் சேர்த்து வைத்திருந்த பெருமை உடைந்து போகப் போகிறது.

சந்தோஷ் முகத்தில் ஈயாடவில்லை. பள்ளி, கல்லூரி முதற்கொண்டு 'சென்ற விடமெல்லாம்' செஸ் மன்னனாக பட்டம் வென்ற பெருமிதம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. முகம் வெளிறத் தொடங்கியது.

மாமா நமச்சிவாயம், மாமி , கஸின் செளம்யா முகங்கள் உறைந்து போயிருந்தன.

நொடி முட்கள் மட்டும் நகரும் சத்தம் அவனது இதயத்தின் துடிப்பு போல் கேட்டது. தூரத்தில் போகும் இரயிலின் கூவல் ஓசை அவன் கண்களின் இடுக்கில் துளிர்த்துக் கொண்டிருந்த கண்ணீரை வெட்டித் தள்ளத் தொடங்கியது.

கார்த்திக் மெல்ல நிமிர்ந்து பார்த்தான். அவன் வலது கை விரல்கள் மேலே அனைவரது கவனமும் இருந்தது. கறுப்புக் குதிரையின் தலையை இறுக்கிப் பிடித்திருந்தான்.

நேரம் உறைந்தது போல் அனைவரும் அப்படியே இருந்தனர்.

மெல்ல விடுவித்தான் குதிரையை.

தள்ளடியபடி அதே இடத்தில் நின்றது.

"அங்கிள்.. உங்க போட்டி இப்ப முடிஞ்சிருச்சுனு நினைக்கிறேன். நான் Win பண்ணப் போறேன். இந்தக் குதிரை தாண்டினால் சந்தோஷ் ராஜா காலி. ஜெயிக்கப் போறேனு தெரிஞ்சதுக்கப்புறம் ஜெயிக்கறது வெற்றி இல்லை. இப்ப சொல்லுங்க. உங்க பொண்ணைத் திருமணம் செஞ்சுக்கலாம் இல்லையா? இந்தப் போட்டியில ஜெயிச்சு தான் உங்க பொண்ணைத் திருமணம் பண்ணிக்கணும்னு அவசியமில்லை எனக்கு. நான் நினைச்சிருந்தா இங்க வந்து சொல்லாமயே உங்க பொண்ணைக் கூட்டிட்டு போயிருக்க முடியும். ஆனா நீங்க போட்டியில ஜெயிக்கணும்னு சொல்லி, உங்க பொண்ணை பணயம் வைச்சீங்க. உங்க Male Chavnism போக்கை அழிக்கறதுக்கு தான் இந்தப் போட்டிக்கு ஒத்துக்கிட்டேன். இன்னும் நான் ஜெயிக்கல. இப்படி ஜெயித்து தான் இந்தக் கல்யாணம் நடக்கணும்னு இல்லை. இனிமேல் உங்க இஷ்டம். நான் வர்றேன்..Good Bye."

வெளியேறினான் கார்த்திக்.

பிறகு நெடு நேரம் அங்கு அமைதியே குடி கொண்டிருந்தது.

1 comment:

Anonymous said...

இதுவும் சூப்பர் ஜெயிக்கப்போறோம் என்று தெரிஞ்சதுக்கப்புறம் ஜெயிப்பது வெற்றி அல்ல .என்ற வரிகள் அருமை