Saturday, February 02, 2008

கரு நிழலே..!



நிழல்களின் நிகரற்ற மெளனத்தின் பொருள் என்னவாயிருக்கும்? வெயில் எரிக்கையில் உதிரும் சக்கையின் கருநிறத்தில் குழைத்த நிழலே, நீ எங்ஙனம் என்னை விட்டு விலகாது நிற்கிறாய்?

ஒரு நாள் நீ விஸ்வரூபம் எடுக்கையில் என்னவெல்லாம் செய்வாய், என்றும் உன்னை காலடியில் பிடித்து தேய்த்து மிதித்து கொண்டேயிருக்கும் என்னை?

அலையாடிய ஆற்றின் ஈரக்கரைகளில் நீயும் என்னுடன் தனிமையில் ஒருக்களித்துப் படுத்து ஓய்ந்திருந்த காலங்களில் , நான் நினைத்த எண்ணங்களைத் தான் நீயும் எண்ணியிருந்தாயா?

இத்யம் தெறிக்க நான் ஓடிய போது, உனக்கும் மூச்சிரைத்ததா?

வெட்கத்துடன் முதன் முதலில் சிரித்து, என் கண் பார்க்க மறுத்து மண் பார்க்கையில், முன்னின்று சிரித்த நிழலே, என்னை விடவும் உற்றவனோ நீ அவளுக்கு?

மலரெடுக்க வைத்த கை மேல், தைத்த முட்கள் வலித்த போது எட்டிப் பார்த்ததா ரத்தம் உன்னிடமிருந்தும்?

தேய்ந்து வருகின்ற காலக் கணக்கில் என்னுடன் என்றும் இருக்கும் நிழலே, உனை அடைய என்ன தவம் செய்தனன்...?

தொடர்புடைய மற்றுமொன்று :

என் நிழல்...!

No comments: