Thursday, January 31, 2008

வணக்கம் சொல்லித் துவங்க இது என்ன சொற்பொழிவா?



தாவது ஒன்றை எழுதத் தொடங்க வேண்டும். என்ன என்று தோன்றவில்லை.

விரைந்து பாயும் மேகங்கள் போன்று மறைந்து கொண்டே இருக்கின்றது காலம். அதற்குள் என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பதற்குள் அந்த நேரமும் மறைகின்றது.

ஏதேதோ நினைவுகள் தோன்றிக் கொண்டே இருக்கின்ற மனதில், தோண்டத் தோண்ட ஊறிக் கொண்டே இருக்கின்றன பற்பல எண்ணங்கள். அவற்றைப் பந்தி வைக்க முடியுமா?

அவ்வப்போது உள்ளூறும் நினைவுகளை இங்கே களம் இறக்கி வைக்கின்றேன்.

இன்னும் எழுத இருக்கின்றன ஆயிரம் கதைகள்...!

,,,,,,,,,,,, இந்த காற்புள்ளிகள் வரிசையாகச் செல்லும் எறும்புகள் போல் இல்லை...?


No comments: