Thursday, January 31, 2008

எண்ணங்கள்....

ந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றதென யோசிக்கிறென்.

இன்று இதெல்லாம் தான் எழுத வேண்டும் என்று துண்டுச் சீட்டில் குறித்து வைத்து, டெக்னோபார்க்கை விட்டு வெளியே வந்து சாலையைக் கடக்கையில் நிமிர்ந்து பார்த்தால், இயேசு அழைக்கிறார் ரேஞ்சில் ஒரு போஸ்டர். அதில் அவர் இரு கைகளையும் விரித்து நம்மை அழைக்கிறார். அது அப்படியே ஓர் இயக்குநர் கைகளை விரித்து பார்ப்பது போல் தோன்றி, ஒரு கதை உருவாகி, எழுதி விட்டேன்.

அப்படியென்றால் அந்த கதை இவ்வளவு நாளாக ஏன் தோன்றவில்லை? ஏன் இன்று அந்த போஸ்டரைப் பார்த்தவுடன் தோன்ற வேண்டும்? உண்மையில் அது 'தோன்றியதா'? இல்லை என்னுடனே அது இவ்வளவு நாளாக இருந்து, நான் தான் அதை கவனியாமல் இருந்து விட்டேனா?

அந்த போஸ்டர் ஒரு விளக்கு போல் அந்த எண்ணத்தைக் காட்டியதா?

நிஜத்தில் எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? ஏன் எனக்கு வருகின்றன? என்னால் மட்டும் எப்படி இப்படி கதைகள் எழுத முடிகின்றது? என்னால் ஏன் மோகன் தாஸ் சார் போல் அற்புதமாக எழுத முழிவதில்லை? டுபுக்கு சார் போல் நகைச்சுவை துளியும் வர மாட்டேன் என்கிறதே, ஏன்?

ஏன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் மட்டும் வருகிறது?

எண்ணங்கள்...எண்ணங்கள்...

No comments: