Sunday, January 27, 2008

இது ஒரு காதல் கதை...? - 5

ன்னும் கதையை வளர்ப்பானேன்..?

அருணும், மலரும் இறுதிவரை சந்திக்கவேயில்லை. ஆர்.டி.ஓ. ஆபிஸில் இது போல் விலாசம் தருவதில்லை என்று கூறி விட்டதால், பிறகு அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள முடியவில்லை.

வாழ்க்கையென்னும் ஒரு புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கமாக நின்று போய் விட்டது, இந்தக் காதல்.

அருணும், மலரும் திருமணம் செய்து கொண்டனர், பிறகு தம் பெற்றோர் பார்த்து முடித்து வைத்த வரன்களை..!

எனவே... அவர்கள்...

தயவித்து முதல் பாகத்தின் முதல் இரண்டு வரிகளைப் பார்க்கவும்.

பி.கு.: 'ஏண்டா.. உனக்கு பாசிட்டிவா முடிக்கவே தெரியாதா..? நெகட்டிவா, சோகமா முடிச்சா தான் உனக்கு இலக்கியம் படைச்சதா நினைப்பா..' - இந்த மனசாட்சி தொல்லை தாங்க முடியலங்க..!

'அதான் இது ஒரு காதல் கதை...?னு கேள்விக்குறி போட்டுட்டமில்ல..'

2 comments:

PPattian said...

சிந்தித்த முடிவே இதுதானா? இல்லை, எழுத நேரமின்மையால் இப்படி முடிவா... ஆனாலும் பிராக்டிக்கலான முடிவு..

இரா. வசந்த குமார். said...

ஹி..ஹி... எல்லாம் தெரிஞ்சுக்கிட்டே கேட்டா எப்படி சார்... எப்படி கரெக்டா கண்டுபிடிச்சீங்க..?